Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 2, 2016

    ஆசிரியர் பணிக்கு போலி ஆணை

    போலி ஆணையை காட்டி ராமநாதபுரம் அருகே அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர முயன்றவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெரம்பலுார் மாவட்டம் பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் 2013ல் ராமநாதபுரம் அருகே காமன்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழாசிரியர் பணியில் சேருவதற்கான பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் ஆணையை தலைமை ஆசிரியரிடம் கொடுத்தார்.

    அந்த ஆணையில் 'உயர்நிலைப்பள்ளி' என, இருந்ததால் சந்தேகமடைந்த தலைமைஆசிரியர் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வருமாறு கூறினார்.
    இதையடுத்து செல்வக்குமார், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணி உத்தரவு ஆணையை காட்டி ஒப்புதல் கடிதம் தருமாறு கேட்டார். சந்தேகமடைந்த முதன்மை கல்வி அலுவலர், பள்ளி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் விசாரித்தார். இதில் செல்வக்குமார் கொடுத்தது 'போலி ஆணை' என, தெரியவந்தது.முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு மணிவண்ணன் எஸ்.பி., யிடம் புகார் அளித்தார். இதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

    No comments: