Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, January 31, 2016

    10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் திருச்சி மத்திய சிறையின் 67 கைதிகள்

    திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளில், 67 பேர், நடப்பாண்டு, ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.தமிழகத்தில் சென்னை புழல், வேலுார், சேலம், கடலுார், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள மத்திய சிறையில், விசாரணை மற்றும் தண்டனை கைதிகள், 20,000 பேர் அடைக்கப் பட்டுள்ளனர்.


    வழக்கில் தண்டனை பெற்று வரும் குற்றவாளிகளை திருத்தி, எதிர்காலத்தில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட, மத்திய சிறைகளில் பல்வேறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இது தவிர, சிறையிலுள்ள கைதிகள் பள்ளிக் கல்வி முதல், பட்டப் படிப்பு பயில வாய்ப்புகள் வழங்கப் படுகின்றன. இதற்காக, மத்திய சிறையில் சிறப்பு வகுப்புகளும், படிப்பதற்கான புத்தகங்களும் வழங்குவதுடன், நுாலகத்தையும் ஏற்படுத்தி உள்ளனர்.
    ஆண்டுதோறும் பள்ளி பொதுத்தேர்வு முதல், பட்டப் படிப்பிற்கான தேர்வு எழுதும் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள, 67 கைதிகள், ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர்.
    இது குறித்து மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் கூறியதாவது:திருச்சி மத்திய சிறையில் விவசாயம், சோப்பு தயாரித்தல், ரெடிமேட் ஆடை உற்பத்தி, நாப்கின் தயாரிப்பு, உணவுப் பொருட்கள், பேக்கரி பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டு, கைதிகளுக்கு பயிற்சியும், வேலை வாய்ப்பும் வழங்குகிறோம்.
    தவிர, எஸ்.எஸ்.எல்.சி., ப்ளஸ் 2, பட்டப்படிப்பு, மேலாண்மை, சட்டம் உள்ளிட்ட படிப்புகள் படிக்க விரும்பும் கைதிகளை ஊக்கப்படுத்தி, படிக்கவும் வைக்கிறோம்.
    நடப்பாண்டு ௧௦ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, 60 பேரும், பிளஸ் 2 தேர்வு எழுத ஏழு பேருமாக, 67 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை மூலம் படிப்பதற்கான அனைத்து வசதிகளை செய்துள்ளோம். கடந்தாண்டைவிட, 25 சதவீதம் பேர் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: