Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 31, 2014

    பாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்

    இன்சூரன்ஸ் பாலிசி யின் முதிர்வு தொகை பெறுவது குறித்து, எல்..சி.,யின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் மண்டல மேலாளர்

    கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

    சென்னையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன்போக்குவரத்து கழகத்தின் 11 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான
    முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
    இதனால், கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து இல்லாமல்

    TNPSC 2015-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை

    2015-ம் ஆண்டுக்கான-டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஜனவரி இறுதியில் வெளியிடப்படும் .,என சென்னையில் செய்தியாளர்களிடம்பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

    பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு !

    நேற்று நடந்த கவுன்சிலிங்கில் முறைகேடு ஆசிரியர்கள் போராட்டம்

    தேசிய நல்லாசிரியர் விருது 2014-தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள்

    Tuesday, December 30, 2014

    முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! - நா.முத்துநிலவன் கட்டுரை

     என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக

    தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்

    வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ
    அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும்

    சாய்ந்தது "தல".... டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு "குட்பை" சொன்னார் டோணி...கோஹ்லி புது கேப்டன்!

    சாய்ந்தது

    போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்வு

    அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 107 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு

    வரலாறு பாடத்தை முதன்மை பாடமாக படித்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க கோரிக்கை

    இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாற்றை முதன்மை பாடமாக படித்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆசிரியர்தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழகத்தின் மாநில

    பொதுச்செயலாளர் பழனியப்பன் தமிழக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் உள்ள அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும்

    இருபாலர் மேனிலைப்பள்ளிகளிலிருந்து 2014-2015ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 20 அரசு பெண்கள் மே.நி.பள்ளிகளுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை

    தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் உயர்மட்ட பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையில் - அரசு ஊழியர் சங்க கட்டிட சிவ.இளங்கோ அரங்கில் வரும் ஜனவரி 8 வியாழன் அன்று நடைபெற உள்ளது.

    தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் 2003 க்குபிறகு நியமனம் பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனை ரத்து செய்யக்கோரி அனைத்து இயக்கங்கள் சார்பாக பலபோராட்டங்கள் நடத்தப்பட்டன.எனினும் அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை.

    PGTRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!

    தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

    டிட்டோஜாக் (TETOJAC) உயர் மட்டக்கூட்டம் ஜனவரி-7 அன்று சென்னையில் கூடுகிறது; TNTF பொதுச்செயலர் செ.முத்துசாமி

    டிட்டோஜாக் தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (TETOJAC)வின் உயர்மட்டக்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 7 புதன்கிழமை சென்னையில் ஆசிரியர் மன்றம் பொதுச்செயலர் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையில் சென்னையில் கூடுகிறது.

    Monday, December 29, 2014

    தொடக்கக் கல்வி - புதியதாக உருவாக்கப்பட்ட 128 தொடக்கப்பள்ளிதலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட44 நடுநிலைப்பள்ளிகளில் முதல்கணிதம்/அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வு மூலம் 30.12.2014 அன்று கலந்தாய்வு மூலம் நிரப்ப இயக்குனர் உத்தரவு

    TNTET: வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO.71, GO.25 & GO.29 எதிராக பதியப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.

    வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO.71, GO.25 & GO.29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற
    உள்ளது. இருதரப்பும் கட்டாயம் ஆஜராக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எச்சரிக்கை.... ! ! கறிக்கோழி சாப்பிடுவோர்க்கு எச்சரிக்கை ! !

    கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம்.

    சத்துணவு ஊழியர் சம்பள முரண்பாடு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கடம்பூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வெளியிடப் பட்ட அரசாணையில் உள்ள முரண்பாடுகளை களைய 28.2.2011ல் ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.

    நாட்டிலேயே முதன்முறையாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் புத்தகங்கள்: அரசு அறிவிப்பு

    உலகின் பல நாடுகளில் உள்ள பள்ளிகளில் ‘டிஜிட்டல் முறை பாடத்திட்டங்கள்’ நடைமுறையில் உள்ளது. காகிதத்தில் அச்சிடப்பட்ட பாடநூல்களுக்கும், கரும்பலகைகளுக்கும் மாற்றாக வகுப்பறைகளில் பெரிய திரைகள் பொருத்தப்பட்டு ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த கணினியை இயக்கி, இன்று எந்த புத்தகத்தில் இருந்து எத்தனையாவது பாடத்தை நடத்த வேண்டும்? என்பதை வகுப்பாசிரியர் தேர்வு செய்வார்.

    செல்போன் வெடித்து 5ம் வகுப்பு மாணவர் காயம்

    பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் மகன் ஆதிகேசவன் (வயது-12). இவர், எசனையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்

    கேரள பள்ளிகளில், 'டிஜிட்டல்' பாடபுத்தகங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக, பள்ளிப் பாடங்கள் அனைத்தும், மல்டிமீடியா பாடங்களாக மாற்றப்பட்டு, காட்சிகள் மற்றும் ஒலிகள் மூலம் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.

    பள்ளிக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு.முனைவர்.ச.கண்ணப்பன் அவர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள நேர்முகக்கடிதம்

    அண்ணாமலைப் பல்கலைக்கு, தேசிய தர மதிப்பீட்டுக் குழு, 'ஏ' கிரேடு வழங்கி உள்ளது.


    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில், நிதி நெருக்கடி மற்றும் நிதி முறைகேடு ஏற்பட்டதால், கடந்த, 2013 ஏப்ரல் மாதம், பல்கலை நிர்வாகத்தை, தன் கட்டுப்பாட்டிற்குள் அரசு கொண்டு வந்தது. 

    Sunday, December 28, 2014

    ஆங்கிலத்தில் மார்க் அள்ளுவது எப்படி?

    மொழிப்பாடங்களில் ஒப்பீட்டளவில் தமிழை விட எளிமையானது ஆங்கிலம். தமிழ் அளவுக்கு மெனக்கெடல் ஆங்கிலத்தில் தேவையில்லை. ஆங்கிலத்தை ஊன்றிப் படிப்பவர்களால் இதை உணர முடியும்.
    கை கொடுக்கும்
    தொழிற்கல்விக்கான கட் ஆஃப் மதிப்பெண்களில் பலர் ஒரே புள்ளிகளைப் பெறும்போது, பிறந்த தேதிக்கு அடுத்தபடியாக ஆங்கிலத்தில் எடுக்கும் மதிப்பெண் முன்னுரிமையாகக் கொள்ளப்படும். அதனால், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்காதவர்கள் கூட ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற உழைப்பார்கள். கட்டுரை மற்றும் பாராகிராஃப் அளவான விடைகளைத் தரவேண்டிய வினாக்கள் தவிர இதர பகுதிகளில் மதிப்பெண்களைக் குறைப்பதற்கு அதிக வாய்ப்பேயில்லை. எனவே கூடுதல் மதிப்பெண்களைக் குவிக்க ஆங்கிலமே அதிகம் கைகொடுக்கும்.

    பள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் லேப்டாப் திருடு போனது.

    பள்ளி மாணவன் மரணத்தில் சந்தேகம்: உடலை பாதுகாப்பாக வைக்க உத்தரவு

    பள்ளி மாணவனின் உடலை, பாதுகாப்பாக வைக்கும்படி, திருச்சி, அரசு மருத்துவமனை கல்லூரியின் டீனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?

    வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012


    DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
    PROVISIONAL MARK LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW
    ECONOMICSGEOGRAPHYCOMMERCETAMIL
    COMMERCE (E-COM)BUSINESS ADMINISTRATIONBUSINESS MANAGEMENT
    POLITICAL SCIENCEPUBLIC ADMINISTRATIONPHYSICAL EDUCATION

    Dated : 24-12-2014

    Member Secretary

    Saturday, December 27, 2014

    இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்த நீதிமன்ற தீர்ப்பும்,”அதனை அமுலாக்கமுடியாது “ என்ற நிதிச்செயலர் கடிதமும் - ஓர் அலசல் கட்டுரை

    ARTICLE PREPARED BY MR.S.MUTHUSAMY, EX.MLC., GENERAL SECRETARY, TNTF...

    பொதுத்துறை - தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி மாற்றம் குறித்த ஆணை

    பள்ளிகல்வித்துறை துணை செயலாளர் திரு.எஸ்.பழனிச்சாமி அவர்களை நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு

    அரசு பள்ளி கல்வித்துறை துணை செயலாளராக இருக்கும் எஸ்.பழனிச்சாமி நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    பள்ளிக்கல்வித்துறை - கல்வித் தகவல் மேலாண்மை முறை - பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் தகவல் தொகுப்பு விவரங்களை இணையதளத்தில் 2014-15ம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் சார்ந்த திட்ட இயக்குனரின் அறிவுரைகள்

    மாவட்ட அளவிலான கணித திறனறி போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் சிறப்பிடம்

    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின்  சார்பாக கடந்த 07.12.2014 அன்று கோவை மண்டல அறிவியல் மையத்தில் கணித திறனறி போட்டி நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள, 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார்  பள்ளிகளைச் சேர்ந்த 5 முதல் 8ஆம் வகுப்பு  பயிலும்  560 மாணவர்கள்  கலந்து கொண்டனர். பங்கு பெற்ற மாணவர்கள்  மிக  மிக நன்று, மிக நன்று, நன்று என மூன்று பிரிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டனர்.

    இடைநிலை ஆசிரியர் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்; பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

    மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த போதிலும், அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இக்கோரிக்கை நியாயமற்றது; சாத்தியமற்றது என அரசு கூறியுள்ளது.

    பயிற்சிகளால் பள்ளி செயல்பாடுகளில் பாதிப்பு

    6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கூட்டுறவுத் அமைப்பு பதிவாளராக இருந்த ஆர். கிர்லோஷ் குமார்நகர் மற்றும் ஊர் அமைப்பு திட்டத் துறை இயக்குநராகபணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் கூட்டுறவுதுறை பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    முழு சுகாதர தமிழகம் இயக்கத்தின் பள்ளி அளவிலான பேச்சு,கட்டுரை,ஓவிய போட்டிகள்

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முழு சுகாதர தமிழகம் இயக்கத்தின் சார்பாக  பேச்சு,கட்டுரை,ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    குடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    குடும்ப பிரச்னையை காரணமாகக் கொண்டு அரசு ஊழியரின் பதவி உயர்வை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிபவர் ஏ.வேலுசாமி. அவருக்கு 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    தேவை... ஒற்றுமையும்...வீரமும்...!

    திருத்திக் கொள்ள வேண்டியவை :

    1. ஆசிரியர்களை இனம் பிரிக்காதே... சாதிகளால் சிதறுண்ட சமுதாயம் போல் எதற்கும் பயன்படாமல் போய்விடும்...

    2. நான் வேறு இயக்கம் அவன் வேறு இயக்கம்...அவனது செயல்பாடுகளுக்கு எனது ஆதரவு கிடையாது என்று பிரிந்து கிடந்ததாலேயே இன்று வரை நாம் வெல்ல முடியவில்லை...

    பள்ளிகளின் தரம் உயர்ந்தன..! ஆனால் வசதியோ..?

    தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 6 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.

    தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

    DGE - NMMS EXAMINATION POSTPONED TO 24.01.2015 REG LETTER CLICK HERE...

    எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2014 அன்று நடைபெறவிருந்த தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Friday, December 26, 2014

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்த கல்வித்துறை முயற்சி - நாகை பாலா

    தமிழக அரசு ஊழியர்களின் பணித்திறனை (Performance) மதிப்பிடுவது எந்தவொரு துறையிலும் நடைமுறையில் இல்லை. பணி நியமனம் செய்வது போட்டித்தேர்வின் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்படியோ நியமிக்கப்படுகிறார்கள். 

    என்.எம்.எம்.எஸ். தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லை - மாணவர் பங்கேற்பில்லாத அவலநிலை

    கோவை மாநகராட்சி கல்வி அதிகாரிகளுக்கும், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், என்.எம்.எம்.எஸ்., தேர்வு குறித்த விழிப்புணர்வு இன்மையால், 23 மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் ஒருவரும் பங்கேற்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய சேர்க்கைத் தேர்வில் கலந்துகொள்ள...

    இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில், சேர்க்கைக்கான தேர்வில் கலந்துகொள்ள, வீரர், வீராங்கனைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    2014-ம் ஆண்டிற்கான உலகி்ன் சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்திய விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

    லண்டனில் இருந்து வெளிவரும் நேச்சர்
    எனப்படும் அறிவியல் இதழ் ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பெறும் விஞ்ஞானிகளை பட்டியலிட்டு வருகிறது.

    நடைப்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

    நமது உடம்பை ஆரோகியமாக வைத்திருக்க நடைப்பயிற்சி முக்கியம். இந்த நடை பயிற்சியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று சிலருக்கு கேள்விகள் எழும்பும். அவர்கள் கவனிக்க வேண்டியவை:

    எஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்காக தகுதியுள்ள மாணவ-மாணவியர் கொண்ட பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஆன்-லைன் மூலம்ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.43 ஆயிரம் சுருட்டல்

    ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ஆன்-லைன் மூலம் ரூ.43 ஆயிரம் சுருட்டியது தொடர்பான புகாரை வாங்க மறுத்து, கேளம்பாக்கம் போலீசார் அலைக்கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தனியார் இ-மெயில் சேவைகளை பயன்படுத்த வேண்டாம்: அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தல்

    தனியார் இ-மெயில் சேவைகளை அலுவலகப் பணிகளுக்கு உபயோகப்படுத்த வேண்டாம் என்று அரசுத் துறைகள், அமைச்சர்களை மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரபலமான சில தனியார் இ-மெயில் சேவைகளில் பகிரப்படும் முக்கியத் தகவல்கள், ரகசியங்கள் வெளியே கசிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு

    லோக்பால், லோக் ஆயுக்த சட்டத்தின்படி, மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை கட்டாயமாகத் தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு, தற்போது அடுத்த ஆண்டு (2015) ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் துறை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.

    மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்தச்தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    வாட்ஸ் அப்பில் பரவிய வழிப்பறி சம்பவம்: ஆசிரியையிடம் கத்தியை காட்டி நகை பறித்தவர் தூத்துக்குடியில் சிக்கனார்

    குழந்தைகள் கொடுத்த காசுதான் 20 வருஷமா என் பசியை போக்கியிருக்கு: பள்ளிகளில் கோமாளி நாடகம் போடும் உதவிப் பேராசிரியர்

    ‘நான் ஒரு கோமாளி.. இருபது வருடங்களாக குழந்தைகள் கொடுத்த காசில் சாப்பிட்டது எனக்கு கடவுள் கொடுத்த வரம். இந்த பாக்கியம் யாருக்கும் கிடைத்துவிடாது’’ கண்கள் நனைய பேசுகிறார் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் வேலு சரவணன்.

    சிறுநீர்ப் பாதை தொற்றை தவிர்க்க அருமருந்தாகும் தண்ணீர்!

    சிறுநீரக தொற்று குறித்து விளக்கும், பெண்கள் சிறப்பு மருத்துவர் டாக்டர் கலைவாணி ராமலிங்கம்: 'இகோலை' என்ற கிருமிகள், எப்போதுமே குடலில் இருக்கும். சிறுநீர்ப் பாதையில் சுத்தமின்மை, தண்ணீர் போதிய அளவு குடிக்கவில்லை என்றால், அந்தக் கிருமிகள், கிட்னிக்கு உள்ளே போகிற அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுகாதாரம் சரியில்லாத காரணத்தால், பெண்கள், சிறுமியர் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதால், 'யூரின் இன்பெக்ஷன்' ஏற்படுகிறது.

    Thursday, December 25, 2014

    குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு 29-ந்தேதி நடைபெறும் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


    குரூப்-2 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 29-ந்தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. குரூப்-2 தேர்வுக்கான கலந்தாய்வு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    மத்திய அரசு ஊழியர்கள் குழப்பம்; கிறிஸ்துமஸ் லீவு உண்டா? இல்லையா?

    நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வேலைக்கு வரும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெருக்கல் கணக்குகளை மிக எளிதாக தீர்க்கும் வழிமுறை,,,

    பெருக்கல் கணக்குகளை மிக எளிதாக தீர்க்கும் வழிமுறைகளை காணும் வரிசையில், எந்தவொரு எண்ணையும் 9ஆல் மிக எளிதாக பெருக்கும் முறையை இங்கு காணலாம். இதற்கு நாம் பின்பற்ற வேண்டியது மிகச்சிறிய வழிமுறைகள் தான்.

    கற்பித்தலில் ஆசிரியர்களின் புதிய உத்திகளை பதிய வேண்டுகோள்

    பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதிய உத்திகள் கையாண்டிருந்தால், அவற்றை இணையதளத்தில் பதிவுசெய்ய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
    கடந்த 2012 முதல் பள்ளிக் கல்வியில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆசிரியர்கள் பிஎப் தணிக்கை விவகாரம் 63 தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ்

    ஊராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்கு தொடர்பாக, அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. ஆனால், தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களின் சேமநல நிதி கணக்குகள் 2013-14ம் ஆண்டு வரை உள்ள விவரங்களை ஒன்றியம் வாரியாக தகவல் தொகுப்பு ஆணையருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    நற்சான்றுக்கு அலையும் தலைமையாசிரியர்கள்!

    மாணவர்களுக்கு நற்சான்று வழங்கும் தலைமையாசிரியர்கள் கல்வித் துறையின் உத்தரவால் அவர்களுக்கே நற்சான்று கேட்டு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளை தேடி அலைகின்றனர்.

    பிளஸ் 2 மாணவர்களின் பெயர்ப்பட்டியல் சரிபார்ப்பு

    தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி துவங்கி, மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வெழுதும் பள்ளி மாணவ, மாணவியரின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி ஏற்கெனவே, அந்தந்த பள்ளிகள் மூலம் தயாரிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சுற்றுச்சூழல் நிதி பயன்பாடு; தொடக்க பள்ளிகள் தாமதம்

    மதுரை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் நிதியை செலவிடுவதில் அரசு தொடக்கப் பள்ளிகள் போதிய ஆர்வம் காட்டு வதில்லை என புகார் எழுந்துள்ளது. மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பள்ளிகளில் மரக்கன்று, மூலிகை செடி வளர்ப்பு, பசுமை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படுகின்றன.

    பாலியல் வன்முறைகளை தடுக்கஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

    பாலியல் வன்முறைகளை தடுக்க ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பதற்கும், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பள்ளி மாணவன் சாவில் மர்மம் : பிரேத பரிசோதனைக்கு பெற்றோர் நிபந்தனை

    தனியார் பள்ளியில், இறந்த மகன் உடலை, அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்' என, திருச்சி மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்வரியிடம், பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

    குரூப்-4 தேர்வில் 10 லட்சம் பேர் போட்டி; உணர்த்துவது என்ன?

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர். அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.

    10-ம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றமா? தேர்வுத்துறை இயக்குநர் விளக்கம்

    அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒன்றாகும். எனவே தேர்வுகள் சம்பந்தமான சரியான செய்திகள் மாணவர்களை சென்றடைவது மிக அவசியமானதாகும். தவறான செய்திகள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும். தவறான செய்திகளால் மனதளவில் மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

    நெட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?


    * நெட் தேர்வில் முதுநிலைப் படிப்புகளில் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவுகளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதனால், நீங்கள் உங்களது முதுநிலைப் படிப்பிற்கான புத்தகங்களை தேசிய தகுதி தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் சேகரித்து வைத்து கொள்ள வேண்டும். அத்துடன் முதுநிலை படிப்பைப் படிக்கும்போது வகுப்பறையில் குறிப்புகளை எழுதி வைத்த நோட்டுகளையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    Wednesday, December 24, 2014

    ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர்களுக்கான பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த தேர்வு நடத்துதல் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்புகான ஆய்வு கூட்டம், 26.12.2014 அன்று சென்னையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

    தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனச்சிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி உத்தரவு


    அன்பு நிறைந்த ஆசிரியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துக்கொள்கிறது.


    பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம்


    பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம்தேதி தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல்கள் தேர்வுத்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. 

    அ.தே.இ-பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில், கடந்த வாரத்தில் சில செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்தி தவறானது என தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


    வாஜ்பாய்,மாளவியாவிற்கு பாரத ரத்னா

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து சமாஜ் தலைவர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் அருகே மாணவி பலாத்கார கொலை: அரசிடம் அறிக்கை கேட்கிறது தேசிய மகளிர் ஆணையம்

    வேலூர் அருகே அரசு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பள்ளி கல்வி அதிகாரி அறிக்கை அனுப்ப தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமாரின், கடைசி மகள் கீர்த்திகா(11). கடந்த 16ம் தேதி பள்ளிக்கு சென்ற கீர்த்திகா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    படிக்கும் பள்ளிகளிலேயே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுமையம்: அரசுக்கு நோட்டீஸ்

    அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு மையங்களை ஏற்படுத்தக் கோரும் மனுவுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

    சென்னை பல்கலையின் ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆட்சிமன்ற குழுவில் கடும் ஆட்சேபம்


    சென்னை பல்கலை யின் ஆசிரியர்களை தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, ஆட்சி மன்ற குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.சென்னை பல்கலை யின், ஆட்சி மன்ற குழு (சிண்டிகேட்) கூட்டம், துணைவேந்தர் தாண்ட வன் தலைமையில் நடந்தது. 

    அரசு நர்சிங் பள்ளிகளில் 100 இடங்களுக்கு அனுமதி


    வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசுஅனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

    கட்டாய கல்வி சட்டம்: இனி மாணவரை சேர்க்க முடியுமா? கட்டணத்தை அரசு தராததால் பள்ளிகள் சங்கம் முடிவு


    கட்டாய கல்வி சட்டம் கீழ், மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு, அதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்கவில்லை. எனவே, அடுத்த ஆண்டு சேர்க்கையை நடத்தப் போவதில்லை என, தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.

    டி.டி.இடி தேர்வு மதிப்பெண் சான்று வினியோகம்

    ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து வரும் முதலாண்டு, இரண்டாம்ஆண்டுக்கான மாணவர்களுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. மேற்கண்ட தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றுகள்வினியோகம் செய்யப்படும். 

    Tuesday, December 23, 2014

    POSTS INCLUDED IN GROUP-IV SERVICES (Date of Examination:21.12.2014) Tentative Answer Keys

     Sl.No.
    Subject Name
    POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
    (Date of Examination:21.12.2014)

             1
             2

    குரூப் - 4 தேர்வில் குரான் தொடர்பான கேள்வியால் சர்ச்சை

    டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், திருக்குரான் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், குரானின்படி, மாமலூக் என்பதன் அர்த்தம் என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    கணினியில் இருந்து கண்களைக் காக்க...

    கணினி இன்று நம் வாழ்க்கையில் இணைந்த விஷயமாகி விட்டது. ஆனால் அதிக நேரம் கணினியில் செலவிடுவோர், கண்களில் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான குறிப்புகள் இதோ...

    நிலுவையில் உள்ள கோப்புகளை முடிக்க அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

    3 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    வேலூரில் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு

    வேலூர் கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை தொடக்க நகராட்சி உயர்நிலை மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    வருங்கால வைப்பு நிதி தணிக்கைக்கு ஒவ்வொரு ஆசிரியரிடமும் ரூ.250 பணம் வசூல்: ஆசிரியர்கள் எதிர்ப்பு

    வருங்கால வைப்பு நிதியை தணிக்கை செய்ய பணம் வசூலிப்பதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்காக ஒரு குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த கணக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பராமரிக்கப்படுகிறது. 1996-97 க்கு பின் தணிக்கை செய்யப்படவில்லை.

    பாதை இல்லாமல் பரிதவிக்கும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள்

    அருப்புக்கோட்டையில் அலுவலகம், மாணவர் விடுதிக்கு செல்ல பாதை இல்லாமல் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பரிதவிக்கின்றனர்.

    புதிதாக எட்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களுக்கு அனுமதி

    விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக எட்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என, முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

    காவல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முடிவு

    தமிழக காவல் துறையில், 1,365 எஸ்.ஐ.,க்கள் உட்பட, 14,443 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.

    டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல்

    இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்பான தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்தையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் வருகிற ஜனவரி முதல் நடைபெறவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கூட்டம் கூட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும், 

    2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிவு

    2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான ‘கெடு’ ஜனவரி 1–ந் தேதியுடன் முடிகிறது.நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது.

    திருவள்ளுவர் பிறந்த நாள் - மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி

    திருவள்ளுவர் பிறந்த நாளையொட்டி மாணவர்கள் கட்டுரை, ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். அதில் பங்குபெறும் மாணவர்கள் தங்ளுக்குப் பிடித்த இரண்டு திருக்குறளையும், அதற்கான விளக்கங்களையும் உரைநடையாக எழுதி அனுப்ப வேண்டும். அதேபோல, ஓவியம் வரைபவர்கள், ஒரு வெள்ளை காகிதத்தில் திருவள்ளுவரின் முழு உருவப் படத்தை வரைந்து அனுப்ப வேண்டும்.

    அரையாண்டு தேர்வு இன்று முடிகிறது விடுமுறைக்கு பின் ஜன.2ல் பள்ளி திறப்பு

    தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் அமலில் உள்ளது. 2ம் பருவத்திற்கான தேர்வுகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகின்றன. இன்று (செவ்வாய்) கடைசி தேர்வு நடக்கிறது. இதுபோல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு போல் பொது வினாத்தாள் தயாரித்து வழங்கப்பட்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

    சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்!

    பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும். காலகெடு இருக்க கூடாது. அனைத்து மாணவனும் முழு திறன் கிடைக்கும் வரை காலம் எடுத்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும். ஆசிரியர் பணி தவிற மற்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது. எந்த பள்ளியில் பணி செய்கிறார்களோ அந்த பள்ளியின் அருகில் அவர்களுக்கான இருப்பிடம் அமைத்து தரவேண்டும்.

    மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்!

    ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற பல்வேறு புதிய யுக்திகளையும் புகுத்தி வருகிறது.

    Monday, December 22, 2014

    15 நாட்களில் குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; வி.ஏ.ஓ. கலந்தாய்வு தள்ளிவைப்பு

    குரூப் - 1 தேர்வு எப்போது என்பது, 15 நாட்களில் அறிவிக்கப்படும்; குரூப் - 2ஏ கலந்தாய்வு முடிந்த பின்னரே, வி.ஏ.ஓ., கலந்தாய்வு நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.  தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பிரிவில், காலியாக உள்ள 4,963 பணியிடங்களுக்கான அறிவிப்பை, அக்., மாதம், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.

    இதயத்தை வலிமையாக்கும் வாழை

    இயற்கை குளுக்கோஸ்' என்று கொண்டாடப்படும் வாழைப்பழம் நமக்கு வைட்டமின்-ஏ, ஈ போன்றச் சத்துக்களைத் தருகிறது.
    * இயல்பிலேயே சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும். இவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி பெறும். சூட்டினால் ஏற்படும் கட்டிகளும் நீங்கும், மூட்டு வலி, வாத நோய் இருப்பவர்கள் பச்சை வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

    TNPSC GROUP - IV GENERAL KNOWLEDGE - TENTATIVE ANSWER KEYS - PVC

    கருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர் மனுக்களைப் பரிசீலிக்க புதிய உத்தரவு

    கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 18 வயதை நிறைவு செய்யாமல் பணியில் சேர்ந்தவர்களின் மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.

    10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு பணி தீவிரம்

    மாநிலம் முழுவதும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை எக்காரணங்கள் கொண்டும், பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.

    வன்முறைகள் அதிகரிக்க காரணம் ...அடங்கி விடும் ஊரும், அடக்கம் ஆகும் உறவுகளும் !!

    சமீபகாலமாக நம்மைச் சுற்றி கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் பல சமூக விரோத செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதற்கு, வேலைவாய்ப்பின்மை, வறுமை, வறட்சி என்பன போன்ற பல்வேறு விதமான காரணங்கள் கூறப்பட்டாலும், அடிப்படை காரணம் என எடுத்துக் கொண்டால், அது மனித மனம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து தன் இயல்பை இழந்து வருவது தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

    பள்ளி வன்முறைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!

    தலைமை ஆசிரியை கண்டித்ததால் தீக்குளித்த பிளஸ்1 மாணவன் பலி

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஜீவானந்தம் (வயது18). அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2 வாரங்களுக்கு முன் தேர்வு நடைபெற்றதையொட்டி ஆசிரியர்கள், வகுப்பறையில் மேஜைகளை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தனர்.
    அந்த சமயத்தில் வெளியே நின்றிருந்த மாணவன் ஜீவானந்தம் மற்றும் வேறு சில மாணவர்கள் வாய்த் தகராறு செய்து சண்டையிட்டனர்.

    அன்பு என்னும் சாட்டையைக் கையில் எடுங்கள்!

    பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட, 'டாஸ்மாக்'கிற்கு போகும் கலாசாரம் உருவாகியுள்ளது. டாஸ்மாக் பற்றிய கவலைகள் மட்டுமின்றி, சில ஆசிரியர்கள், மாணவியருக்கு தரும் பாலியல் தொல்லைகள், மாணவர்களுடன் ஓரினச் சேர்க்கை தொடர்பான குற்றங்கள், மாணவர்கள் பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் விதம், 'ராகிங்' என்ற பெயரில், சக மாணவர்களை துன்புறுத்தும் செயல்கள் என, பலவிதமான செய்திகளும், அடிக்கடி செய்தித் தாள்களில் இடம் பெறுகின்றன.

    கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி. படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் வேலைவாய்ப்பு அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி., படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட்., படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 2010-11 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

    பாலியல் பலாத்கார சம்பவங்கள் வேலூர் மாவட்டத்துக்கு முதலிடம்

    பாலியல் பலாத்கார நிகழ்வில், தமிழக அளவில், வேலுார் மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வேலுார் மாவட்டம், பாலியல் தொடர்பான குற்றங்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு, 41 பாலியல் பலாத்கார வழக்குகள், 37 பாலியல் தொடர்பான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வறட்டுக் கவுரவம் தான் காரணம்!

    அரசுப் பள்ளிகளில், இன்று எல்லாமே இருக்கிறது. அப்படி இருந்தும், மக்கள், அரசுப் பள்ளிகளை நாடாமல், ஆங்கிலப் பள்ளிகளை நாடுவதற்கு, ஆங்கில மோகம் தான் காரணம் என, பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சத்தியமாக அது காரணம் இல்லை; வறட்டுக் கவுரவம் தான் காரணம்!எல்.கே.ஜி.,க்கே, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வாங்கும் ஆங்கிலப் பள்ளியில், தாய், தன் இரண்டரை வயது குழந்தையை சேர்க்கிறார் என்றால், அதில் உள்ள பெருமையை அனுபவிப்பதற்காக மட்டுமே என்பது, எத்தனை பேருக்குப் புரியும்!

    ஆசிரியையிடம் பட்டபகலில் கத்தியைக் காட்டி, மிரட்டி 14 சவரன் நகைகள் கொள்ளை!

    சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(வயது 42). இவர், அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வேலம்(37). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    Sunday, December 21, 2014

    ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் தமிழக அரசுக்கு, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

    ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதற்காக சட்டத்தை தமிழக அரசு இயற்றவேண்டும் என்று தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

    மத்திய அரசுக்குஇணையான ஊதியம்

    தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

    SSLC - PAPER I & II (PUBLIC QUESTIONS FROM MARCH 2012 TO SEP 2014)

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போரட்டம் நடத்த முடிவு

    1. CPS யை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும்,
    2. 2004 முதல் 2006 ஆண்டு வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
    3. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போரட்டம் (Jan-2015)நடத்த முடிவு செய்து அதற்கான ஆயத்த கூட்டம்

    அரையாண்டு பொதுத் தேர்வு டிசம்பர் 2014 - கணினி அறிவியல் விடைக்குறிப்பு

    TNPSC GROUP - IV GENERAL TAMIL - TENTATIVE ANSWER KEYS - PVC

    அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

    பின்லாந்து என்ற நாடு, நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்குஅறிமுகம். நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலகஅளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில்எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்துபிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்துவைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன்போட்டிபோட முடியவில்லை.

    TENTATIVE ANSWER KEYS FOR TNPSC – GROUP IV EXAM HELD ON 21.12.2014

    ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Saturday, December 20, 2014

    சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2-வது இடம்

    சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2-வது இடம்சிறந்த உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. குறைந்த வித்தியாசத்தில் சீன அதிபர் ஜின்பிங் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 12 ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் தலா 4 நாடுகள், ஐரோப்பாவின் 8 நாடுகள், மற்றும் ஓசியானியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 30 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    அரசுப் போக்குவரத்துக் கழக பணி நியமனம்: நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

    தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பணி நியமனங்கள் நேர்முகத் தேர்வு மூலமாக மட்டுமே நடைபெறக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது.

    தமிழுக்கு இடமில்லை: புதிதாக எந்த மொழியையும் இந்திய ஆட்சி மொழியாக்க முடியாது- மத்திய அரசு அறிவிப்பு

    மத்திய ஆட்சி மொழியாக தமிழ் உள்ளிட்ட எந்த புதிய மொழியையும் சேர்த்துக் கொள்ள முடியாது என மத்திய அரசு இன்று திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

    இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற மேல்சபையில் இன்று காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.

    தமிழக கல்வி திட்டங்களை பின்பற்றி நாடு முழுவதும், உயர்கல்வி சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்

     மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனை, செயலாற்றல் இவற்றின்மூலம் தமிழகத்தில் பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் மிகுந்த வளர்ச்சியடைந்து, மாணவ மாணவியரின் அறிவுத்திறன் பெருகியுள்ளதாகவும், இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்தவேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

    நீங்கள் தள்ளுவண்டியா? இல்லை தானியங்கியா?

    நேரத்திற்கு முடிக்க இயலாத வேலை கவலை தருவதாகவே அமைகிறது. சிறப்பாக வேலை பார்த்தால் சிறந்த வருமானத்தை, பாராட்டை வெகுமதியை அடையலாம். செயல்திறன் இன்மையோ, செயல்திறன் குறைபாடோ கெட்ட பெயரை மட்டுமே வெகுமதியாகப் பெற்றுத்தரும்.

    ஜனவரி முதல் மதுரை காமராஜ் பல்கலையில் ‘ஆன்லைன்’ தேர்வுகள்

    ”மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியில் ஜனவரி முதல் ’ஆன்லைனில்’ தேர்வுகள் நடக்கும்,” என துணைவேந்தர் கல்யாணி தெரிவித்தார்.

    என்.சி.சி., மாணவர்கள் எண்ணிக்கையை 15 லட்சமாக உயர்த்த முடிவு

    கல்வி நிறுவனங்களில், தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி., மாணவர்களின் பலத்தை 2 லட்சத்திலிருந்து, 15 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் லோக்சபாவில் தெரிவித்தார்.

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் வருகிற டிசம்பர் 30 அன்று நாமக்கலில் நடைபெறவுள்ளது

    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் 30.12.2014 அன்று நாமக்கல் மாவட்டத்தில் டாக்டர் வீ.செ.சுப்ரமணியம் மாளிகையில் தலைவர் கு.சி.மணி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்ந்த தமிழக அரசின் கடித எண்.60473/சி.எம்.பி.சி/2014-1, நாள்.10.12.2014, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், டெல்லி பிரதிநிதிகள் மாநாடு, மாநில தேர்தல் மற்றும் தீர்மானங்கள் சார்ந்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

    தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பாடம் செய்முறைத் தேர்வு பாடமாக மாற்றம்

    தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சுப் பாடம் கடந்த 1978–1979 ஆம் கல்வியாண்டு முதல் எழுத்துப் பாடமாக இருந்தது.

    பள்ளிக்கல்வி - குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவு

     

    வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்

    தொடக்கக் கல்வி - நடு நிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் அப்பள்ளிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்படுத்துதல் சார்ந்த அறிவுரைகள்

    ஆசிரியரை கேலி செய்த புகார்: மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி

    கமுதி அருகே கீழபருத்தியூர் பிச்சை தாக்கல் செய்த மனு: எனது மகன் திருச்சுழி அருகே வீரசோழன் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அரையாண்டு தேர்வின் போது கண்காணிப்பாளரான ஒரு ஆசிரியரை சில மாணவர்கள் கேலி செய்தனர்.

    Friday, December 19, 2014

    அ.தே.இ - பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் அடங்கிய பெயர் பட்டியல் 24.12.2014 மாலைக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்து கொள்ளுமாறும், அவ்வாறு தயார் செய்த பட்டியலை 02.01.2015 முதல் www.tndge.in இணையதளத்தில் ஆன்லைனில் (Online) பதிவேற்றம் செய்யுமாறு இயக்குனர் உத்தரவு

    இன்றைய சந்திப்பின் வெற்றி CRC SPL CL,பின்னேற்பு ,தகுதி காண் பருவம் முடித்தற்க்கான ஆணை (TET Trs) இன்று 19.12.2014 SSTA சார்பாக தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.

    SSTA சார்பாக கடந்த மூன்று மாதங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும்                   1)CRC SPL LEAVE, POST PERMISSION ல் CRC Spl leave அரசாணை வெளியிட கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன, விரைவில் எப்பொழுது வேண்டுமானாலும் வெளிவர உள்ளது இது SSTA விற்கு கிடைத்த மற்றொரு வெற்றி.    

    2)உயர் கல்வி அனுமதியின்றி பயின்றமைக்கு பின்னேற்பு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

    மூன்றாவது முறையாக தொடக்கக் கல்வித்துறையில் மீண்டும் ஒரு பதவி உயர்வு வாய்ப்பு?

    புதியதாக தொடங்கப்பட்டுள்ள 128 தொடக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களும் 42 நடுநிலைப்பள்ளிகளில் 42 தலைமையாசிரியர்கள், 126 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கும், அலகு விட்டு அலகு மாறுதலில் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கும் மீண்டும் ஒரு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் தொடக்கக் கல்வி இயக்குநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்தியா இனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி

    சமூக வலைதளங்களின் மூலமாக கருத்துகளை வெளியிடுபவர்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற அதிரடி உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. "தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு உடல் ரீதியாகவோ அல்லது கலாசார ரீதியாகவோ பிறரை மிரட்டி இடையூறு செய்ய நினைப்பவர்கள் மேல் தான் பாய வேண்டுமே தவிர சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது பாயக் கூடாது" என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் தன் தரப்பு கருத்தை பதிவு செய்தது.

    652 கணினி பயிர்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


    DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
    POSTPONEMENT OF CERTIFICATE VERIFICATION
    Pursuant to the letter dated 18.12.2014 received from the Government in School Education Department, Chennai, the Certificate Verification process for selection of 652 Computer

    NMMS தேர்வு 27.12.2014க்கு பதிலாக 03.01.2015 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

    தமிழ்நாடு அமைச்சுப் பணி - பிரிவு கண்காணிப்பாளர்களுக்கான பணி மாறுதல் (வ.எண்.1 முதல் 74 வரை) கலந்தாய்வு 20.12.2014 அன்றும் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு தேர்ந்தோர் பட்டியலில் (வ.எண். 1 முதல் 80 வரை) உள்ளவர்களுக்கு 21.12.2014 அன்றும் சென்னை, பெற்றோர் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

    பள்ளிக்கல்வி -அரசு மேல் நிலைத் தேர்வுகள் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொகுப்பு எண்.461 அலுவலக செயலாண்மை பாட தொகுப்பிலுள்ள தட்டச்சு செய்முறை-1 பாட தேர்வினை பிற செய்முறைப் பாடத் தேர்வுகளோடு இணைந்து நடத்த அரசு ஆணை வெளியீடு

    பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி பயிற்றுநர்களை நியமித்துக் கொள்ள அனுமதித்து வழங்கப்பட்ட அரசாணையை இரத்து செய்து உத்தரவு

    அரசு ஊழியர் ஓய்வு வயதை குறைக்கும் திட்டம் இல்லை; மத்திய அரசு உறுதி


    10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 22 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு

    10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பழைய பாடத்திட்டத்தில் தோல்வியுற்றவர்கள், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

    10ம் வகுப்பில் மாநிலத்தில் 3ம் இடம் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு சாவு

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேரு காலனியை சேர்ந்தவர் தேவதாஸ். கோவை அரசு போக்குவரத்து கழக மேலாளர். இவரது மனைவி சாந்தி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் கீர்த்தனா(17). பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3வது இடம் பிடித்தவர் ஆவார். 

    இரு ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

    விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

    பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர் பணியிடமாற்றங்கள் நிறுத்தம்: அரசு உத்தரவு

    பொதுத்தேர்வு நெருங்குவதால் நடப்பு கல்வியாண்டில் இனி ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று பள்ளி கல்வி செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் கலந்தாய்வு நடந்து முடிந்த பின்னரும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    சிறந்த குடிமக்களாக பள்ளிக்குழந்தைகளை உருவாக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

    பள்ளிக் குழந்தைகளை 21ம் நூற்றாண்டு குடிமக்களாக உருவாக்க உதவும் சிறப்பு வகுப்பறை நிகழ்வுகள் மற்றும் பயிற்சிகள் சென்னையில் நேற்று தொடங்கியது. மாநில கல்வியியல் மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் மேற்கண்ட பயிற்சி மற்றும் மாநாடு 2 நாட்கள் டிபிஐ வளாகத்தில் நடக்கிறது. இதை தொடங்கி வைத்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா பேசியதாவது:

    தொடக்கக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்று நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு பரிசீலிக்க ஏதுவாக விவரம் அளிக்க இயக்குனர் உத்தரவு


    ஆசிரியர்கள் உரிமைக்கழகம்

    ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் உதயமாகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் அரசுப்பதிவு எண் 301/2014 இக்கழகமானது அனைத்து தரப்பட்ட கல்வி புரட்சிக்கு வழிவகுத்திடும்...

    அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைக்கும் எண்ணமில்லை - மத்திய அரசு

    No reduction in retirement age

    There is no proposal under consideration of Government to reduce the retirement age from 60 to 58 years for its employees. The retirement age for Central Government employees was revised from 58 to 60 years in 1997 on the basis of recommendations of the 5th Central Pay Commission.

    முழு சுகாதர தமிழகம் இயக்கத்தின் பள்ளி அளவிலான பேச்சு,கட்டுரை,ஓவிய போட்டிகள்

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் முழு சுகாதர தமிழகம் இயக்கத்தின் சார்பாக பேச்சு,கட்டுரை,ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    Thursday, December 18, 2014

    பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - UDAAN SCHEME - 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு தொழில் நுட்பம், IIT மற்றும் NIT சேர்க்கைக்கு தகுதியின் அடிப்படையில் தேர்ச்சி, இலவச பயிற்சி அளித்தல் சார்பான அறிவுரைகள்

    தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் நிலுவையிலுள்ள கோப்புகளை முடித்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்


    CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) – FEB 2015

    தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்), உடற்கல்வி, சிறப்பாசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக (அனைத்து பாடங்கள்) பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு

    பாகிஸ்தானில் பள்ளி மாணவர்களை தீவிரவாதிகள் பள்ளிகுள்ளேயே படுகொலை செய்ததற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்


    தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள் 16.12.2014 அன்று பள்ளிக் கல்வித்துறைச் செயலர் மற்றும் இயக்குனர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள் 16.12.2014 அன்று பள்ளிக் கல்வித்துறைச் செயலர், பள்ளிக் கல்வி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர்,மற்றும் இணைஇயக்குநர்களைச் சந்தித்தனர். பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் இருபது மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுத் தேர்வுக்காக ஒதுக்கக்

    பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் சங்க மா நில செயற்குழு கூட்டம் 29.12.2014 அன்று திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளது.


    9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு "பேண்ட்': கல்வித் துறை உத்தரவு

    பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பேண்ட் அணிய வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் பயிற்று மொழி அல்ல !

    அண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில் அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கல்வி நன்மதிப்பை உடைய ஒரு நல்ல குடிமகனை உருவாக்குவதாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.

    எட்டாக்கனியாகும் தொடக்கக் கல்வி! இருளர் இன குழந்தைகளின் அவலம்

    உத்தரமேரூர் வட்டத்தில் உள்ள இருளர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் தொடக்கப் பள்ளிகள் இல்லாததால் 3 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு அனுப்ப அந்தச் சமுதாய மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    சேற்றில் தத்தளிக்கும் அரசுப் பள்ளி: மாணவர்கள் அவதி

    போரூரை அடுத்த பரணிபுத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி சேற்றில் தத்தளித்து வருவதால், மாணவர்களின் கல்வித் திறன் பாதிப்படைவதுடன், அவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    ஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்

    பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம் ஒரு வருடமாக இருந்தது. அது வருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ள பி.எட். மற்றும் எம்.எட். படிப்புக்கு பாடத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.

    அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத்தம்

    அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத் தும் பணி நேற்று துவங்கியது.

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தப்படுமா?

    உயர் கல்வியில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    மாணவியை கொன்றது எப்படி? மாணவன் பரபரப்பு வாக்குமூலம்

    ஆறாம் வகுப்பு மாணவியை கொன்றது பற்றி, 10ம் வகுப்பு மாணவன் கொடுத்த வாக்குமூலம், போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், மாச்சனூர் அரசு பள்ளி, ஆறாம் வகுப்பு மாணவியை கொலை செய்த, அதே பள்ளி, 10ம் வகுப்பு மாணவனை, போலீசார், ஓசூரில் கைது செய்தனர்.

    மத்திய / மாநில அரசு ஊழியர்களின் கறுப்பு நாள் - டிசம்பர் 22


    பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் செயவதை நிறுத்தி வைத்தல் - ஆணை வெளியீடு


    DSE - BT TO PGT PANEL 2015

    Wednesday, December 17, 2014

    தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 2015-16ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலையாசிரியர் 01.01.2015 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்க தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

    TNPSC - Departmental Examinations, December 2014 Hall Ticket Published