Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 24, 2014

    பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம்


    பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம்தேதி தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல்கள் தேர்வுத்துறைக்கு வந்து சேர்ந்துள்ளது. 

    தற்போது அவற்றை சரிபார்க்கும் பணியில் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இதையடுத்து நேற்று நாமினல் ரோல் பட்டியல் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை சரிபார்க்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கூட்டம் நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறை அனுப்பிய பிரின்ட் அவுட்டுகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் நேரில் அந்த மையங்களுக்கு எடுத்து வர வேண்டும். திருத்தம் இருந்தால் அதே மையத்தில் திருத்தி இன்றே கொடுக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு கால அவகாசம் ஏதும் கொடுக்காமல் ஒரே நாளில் திருத்தம் செய்துகொடுக்க வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.இந்த பணிகளை விரைவாக முடித்த பிறகு பிப்ரவரி 7ம் தேதியில் இருந்து பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை நடத்த தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. மேலும், தொழில் கல்வி பாடங்களில் இடம் பெற்றுள்ள தட்டச்சு பாடத்துக்கான எழுத்து தேர்வுடன் செய்முறைத் தேர்வும் நடப்பது வழக்கம். 

    ஆனால், இந்த ஆண்டு அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடக்கும் போதே, தட்டச்சு பாடத்துக்கான செய்முறைகளையும் முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கான நாமினல் ரோல் ஜனவரி 2ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

    No comments: