Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 25, 2014

    10-ம் வகுப்பு தேர்வு கால அட்டவணையில் மாற்றமா? தேர்வுத்துறை இயக்குநர் விளக்கம்

    அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒன்றாகும். எனவே தேர்வுகள் சம்பந்தமான சரியான செய்திகள் மாணவர்களை சென்றடைவது மிக அவசியமானதாகும். தவறான செய்திகள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும். தவறான செய்திகளால் மனதளவில் மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

    தேர்வுகள் சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளுமே தேர்வுத்துறையால் அனைத்து மாவட்டங்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். தேர்வுக்கால அட்டவணை போன்ற அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் மட்டும் பத்திரிகைகள், தொலைக்காட்சி வாயிலாக தெரிவிக்கப்படும்.
    10-ம் வகுப்பு தேர்வுக்கால அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில் ஊகத்தின் அடிப்படையில் சில நாளிதழ்களில் தேர்வுக்கால அட்டவணை மாற்றப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியிடப்பட்டன. எனவே தேர்வுத்துறையால் அளிக்கப்படும் செய்திகளை மட்டுமே வெளியிடுமாறும், ஊகத்தின் அடிப்படையில் வெளியிடும் தவறான செய்திகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    1 comment:

    Unknown said...

    எப்படி சார் கல்வித்துறையே ஒரு நிலைத்தன்மை இல்லாத துறையாக மாறி வருவதை நாம் அறியலாம். தூத்துக்குடி ceo மாற்றப்பட்டு புதியதாக நாகர்கோவில் ceo நியமிக்க பட்டதாக பேப்பரில் செய்தி வந்ததே என்ன action
    எடுத்தாங்க பொறுப்பான அதிகாரிகள் இல்லை. ட்ரான்ஸ்பருக்கு பணம் இதுல மட்டும்தான் வெவரமாக இருப்பாங்க