Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 31, 2014

    பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 02.11.2014 அன்று நடைபெறவுள்ளது, மேலும் 22.06.2014 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு 02.11.2014 அன்று ஆணை வழங்கப்படவுள்ளது

    சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்

    சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு.

    சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்.

    பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்தகைய பயங்கர சூரிய மண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது.

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் : தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை

    கடந்த மாதம் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்த முடிவுகள் காட்டும் புள்ளிவிவரங்கள், தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. முதல் தாள், இரண்டாம் தாள் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 89 பேர் மட்டுமே!

    ஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் 239 பேர் தோல்வி மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே காரணம் என குற்றச்சாட்டு

    ஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் 239 பேர் தோல்வியடைந்துள்ளனர். மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ஐஐடியில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ&மாணவிகள் படித்து வருகின்றனர். பொதுவாக ஐஐடிக்களில் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படுவதால், அங்கு படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.

    சாமர்த்தியமாக செயல்பட்டு தனது தாயை பலாத்காரத்திலிருந்து காப்பாற்றியுள்ள சிறுமி

    மும்பையில் நான்கு வயது சிறுமி சாமர்த்தியமாக செயல்பட்டு தனது தாயை பலாத்காரத்திலிருந்து காப்பாற்றியுள்ள சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த திங்களன்று காலை 7 மணி அளவில் ஜெயபால் என்ற வாலிபர், ஒருவர் வீட்டினுள் நுழைந்து கத்தி முனையில் அங்கிருந்த பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

    வாட்ஸ் அப்: புரட்சி...போராட்டம்!

    கடந்த சில வாரங்களாக, வாட்ஸ் அப்பில் காட்டுத் தீயாக பரவும் வேண்டுகோள், 'அக்டோபர் 31ஆம் தேதி யாரும் மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த வேண்டாம். அன்றைய தினம் இண்டர்நெட் இணைப்பை துண்டித்து, நமது எதிர்ப்பை மொபைல் போன் சர்வீஸ் அளிக்கும் நிறுவனங்களுக்குத் தெரிவிப்போம். இனி, திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டணத்தை உயர்த்தும் முன்பு யோசிப்பார்கள்!' என்கிறது அந்த வேண்டுகோள்.

    உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்து முறையாக நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்

    இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில் 2014-15ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், நீதிமன்ற வழக்கின் இடைகால தடையால் இன்னும் உரிய பணியிடத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியில் அண்மையில் நீதிமன்ற தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

    SCHOOL EDUCATION - PAY ORDER FOR 13 HS HM / 210 BT & 500 PGT / 230 BT & 500 PGT / 1200 BT & 200 PET / 675 PGTs FOR SEP & OCT 2014

    SSLC -Mar / Apr - 2015 -Private Application -Press Release Notification

    350 டன் பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி; சி.இ.ஓ., உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு

    350 டன் எடையுள்ள பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி செய்ததாக, சென்னை முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது தி.மு.க., ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடபுத்தங்களை, மாணவர்களுக்கு விநியோகம் செய்ய அனுமதிக்கவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், அவரது திட்டங்கள் குறித்தும், பாடபுத்தகத்தில் இடம்பெற்றதாக காரணம் கூறப்பட்டது.

    2 மாதத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சேமநல நிதி வழங்க உத்தரவு

    ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் சேமநல நிதி நிலுவை தொகையை, இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும் என, ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் உத்தரவிட்டார்.

    பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு

    கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக்கூடாது என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது.

    பரிதாப நிலையில் பகுதிநேர ஊழியர்கள்: நூலகத்துறையை கண்டுகொள்ளாத அரசு

    வேலை நாட்களுக்கு மட்டும் தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாலும், வேறு எந்த அரசு சலுகைகளும் கிடைக்காததாலும், மாதம் 400 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் பகுதிநேர நூலகர்கள் மனம் நொந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.

    அலுவலக நடவடிக்கையில் உறவினர்கள் தலையீடு அமைச்சரை எச்சரித்த கல்வித்துறை செயலாளர்: தலைமை செயலகத்தில் பரபரப்பு

    தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம்  புதுப்பிக்கும் பணி தற்போது நடக்கிறது. அரசு அறிவித்துள்ள தகுதிகள்  உள்ள பள்ளிகளுக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதால், தனியார்  பள்ளி நிர்வாகங்கள் கலக்கத்தில் உள்ளன. வரும் மார்ச் மாதம் பொதுத்  தேர்வு தொடங்க உள்ள நிலையில் அங்கீகாரம் புதுப்பிப்பதில் மெட்ரிக்  பள்ளிகள் நடத்துவோர் வேகம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில்,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உறவினர்கள் சிலர்  மெட்ரிக்குலேஷன் இயக்குனர் அலுவலக நடவடிக்கைகளில் தலையிட்டு,  அங்கீகாரம் வழங்குவதில் சில யோசனைகளை தெரிவித்துள்ளதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு



    பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
    டிசம்பர் 10    புதன்கிழமை - தமிழ் முதல் தாள்
    டிசம்பர் 11    வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
    டிசம்பர் 12    வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
    டிசம்பர் 15    திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
    டிசம்பர் 16    செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்

    தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்

    தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பணியிடங்கள் வியாழக்கிழமை நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.

    பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்: எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் அதிருப்தி!

    பள்ளி மாணவர்களின் கணித, வாசிப்புத் திறனை சோதித்த அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர் பூஜாகுல்கர்னி அதிருப்தி அடைந்தார்.

    Thursday, October 30, 2014

    பள்ளிக்கல்வி - ஓய்வூதியம் பெற தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கு (பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள்) கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

    GPF / TPF RATE OF INTEREST FROM 1994-95 TO 2013-14

    P.F RATE OF INTEREST:
    >1994 to 2000=12%

    >2000-01=11%

    >2001-02=9.50%

    ‘ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தலாம்’; உயர்நீதிமன்றம் உத்தரவு


    அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்திக் கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. ஆனால், தேர்வை இறுதி செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளது.

    புதிய சி.பி.எஸ்.இ., பள்ளி விதிமுறைக்கு பொதுக்கல்வி வாரியம் ஒப்புதல்

    சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    தினமும் 2 கிளாசுக்கு மேல் பால் குடித்தால் உயிருக்கு ஆபத்தாம்!

    தினமும், இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால், உயிருக்கு ஆபத்து என, ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலும் துவக்கப்பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை: யுனெஸ்கோ

    உலகம் முழுவதும் தற்போது, 2 கோடியே 90 லட்சம் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். வரும் 2015ம் ஆண்டில், உலகளாவிய ஆரம்பக் கல்வி என்ற நிலையை அடைய வேண்டுமெனில், இன்னும் கூடுதலாக 40 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்று யுனெஸ்கோ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய ஆசியர் பணியிடங்கள் இரண்டாவது பட்டியல் வருவது உறுதி முதலமைச்சர் தனிப்பிரில் அளிக்கப்பட்ட பதில் மகிழ்ச்சியான தகவல்

    தேனியை சேர்ந்த கே.முத்துராஜ் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அளித்த மனுவின் மூலம் முதலைமைச்சர் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி 2011 முதல் 2013 வரை உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்பப்பட்டது போக மீதம் உள்ள பணியிடங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தேர்வர்களை கொண்டு நிரப்பப்படும்

    கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அருமனை பள்ளி ஆசிரியர்

    கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அருமனையை சேர்ந்த ஒரு ஆசிரியர் சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். கத்தி படத்தில், கதாநாயகி சமந்தா தனது விஜய்யிடம் தன்னை அழைப்பதற்காக ஒரு செல் நம்பர் கொடுக்கிறார். விஜய் இந்த நம்பரை பலமுறை சொல்லி, சொல்லி வருவதாக காட்சி அமைந்துள்ளது. தொடர்ந்து, விஜய் இந்த நம்பரில் அழைக்கும் போது, சென்னை மாநகராட்சி ஊழியர் எடுத்து, இது மாநகராட்சி நம்பர் எனவும், தாங்கள் நாய்பிடிக்கும் பிரிவு எனவும், கூறுவது படத்தில் வேடிக்கையாகவும் உள்ளது.

    பள்ளி மாணவர்களும் கற்கலாம் ‘ரோபாட்டிக்ஸ்’

    ‘சிறுவயது மாணவர்களுக்கு எதற்கு ரோபாட்டிக்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும்?’ என்று சிலர் நினைக்கின்றனர். நமது நாட்டில் தற்போது தேவைக்கும் அதிகமாகவே புரொகிராமர்கள், இன்ஜினியர்கள் இருக்கிறார்கள். கம்ப்யூட்டரை திறம்பட பயன்படுத்துகிறார்கள்; அதுகுறித்த அறிவும் அவர்களுக்கு அதிகம் உள்ளது. தேவையான வசதிகளும், திறமையும் கூட உள்ளது. ஆனாலும், பேஸ்புக் போன்று ஒரு ‘கான்செப்ட்’ இந்தியாவில் உருவாக்கப்பட்டு, இந்த உலகிற்கு எடுத்து செல்லப்படவில்லையே!

    தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு

    அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு, வரும் 30, 31ம் தேதிகளில் நடக்கிறது.

    உளவியல் தீவிரவாதிகள் உஷார்!

    ஏ.கே.47 துப்பாக்கியுடன் இருக்கும் தீவிரவாதிகளை இனம் கண்டு கொள்வது சுலபம். அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என சில உளவியல் தீவிரவாதிகள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு கொள்வது கடினம். இவர்களிடமிருந்து நம்மையும், நம் எதிர்கால கனவுகளையும் பாதுகாத்து கொள்வது அதைவிட கடினம்.

    10 & 12 - காலாண்டுத் தேர்வு - 60 சதவீதத் தேர்ச்சிக்கு குறைவாக உள்ள பள்ளிகள் மீதும், தலைமை ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை

    காலாண்டுத் தேர்வு முடிவு எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் அனுப்ப வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருகிறது.

    10-வது, பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்கள் கொண்ட பள்ளிகள் பட்டியல் உடனே தரும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வுத்துறை கடிதம்

    10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதக்கூடிய மாணவ-மாணவிகள் கொண்ட பள்ளிகளின் பட்டியலை தரும்படி தேர்வுத்துறை பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது. 10-வது, பிளஸ்-2 தேர்வு தமிழ்நாட்டில் வருடந்தோறும் மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் பள்ளிக்கல்வித்துறையின் அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படுகிறது. கடந்த வருடம் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகளும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 11 லட்சம் மாணவ-மாணவிகளும் எழுதினார்கள். இந்த வருடம் அந்த எண்ணிக்கையை விட அதிகம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவார்கள்.

    ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் : பள்ளி கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை

    அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்திக் கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. ஆனால், தேர்வை இறுதி செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளது. வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியை சேர்ந்த, கோபி என்பவர், தாக்கல் செய்த மனு:

    Wednesday, October 29, 2014

    SSTA சார்பில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கின் இன்றைய நிலை

    இன்று SSTA ஊதிய வழக்கு விசாரணைக்கு எட்டப்படவில்லை, பிற வழக்கு 34ம் இறுதி விசாரணை வழக்கு 32ம் மட்டுமே விசாரணை நடந்துள்ளன. இவ்வழக்கு மீண்டும் அடுத்த வாரம் புதன்கிழமை (05.10.2014) அன்று  இறுதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

    தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள், 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறும்

    தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறவுள்ளது: தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

    தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள், 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள்,

    தொடக்கக் கல்வித்துறையில் காலியாக நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 01.11.2014 அன்று நடைபெறவுள்ளது: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு

    தொடக்கக் கல்வித்துறையில் அண்மையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றதையடுத்து ஏற்பட்ட நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள், 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பதவி

    2014-15 கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கும், ஏற்கனவே காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் 3O- ந்தேதி காலை 10 மணி முதல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2014 அன்றைய முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு 31.10.2014 காலை 9மணிக்கு இனையதள வாயிலாக நடைபெறவுள்ளது

    கோடை பண்பலை 100.5 ல் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஒலிபதிவு நிகழ்ச்சி

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான  கோடை பண்பலை 100.5ல் காலை 6.30 மணி முதல் 7.00 மணிக்குள் நடைபெறும் பூந்தளிர் நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஒலிபதிவு  நடைபெற்றது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு: 3000 பணியிடங்களுடன் புதிய பட்டியல் நவம்பரில் வருகிறது

    3000 இடங்களுக்குள் நவம்பர் மாதம் புதிய பட்டியல் வெளியாக உள்ளது இவை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களை மட்டும் கொண்டு நிரப்படுவதாக தகவல்கள் கூறுகிறது. இருப்பினும் 5% மதிப்பெண் தளர்வு மேல்முறையீடு பற்றி அரசு முடிவை பொறுத்து இந்த பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வு உண்டா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே நமது வலைதளத்தில் கூறிய படி 2000க்கு மேற்பட்ட பணியிடங்கள் மற்றும் தற்போது முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியிடங்களையும் சேர்ந்து 2500-3000 பணியிடங்கள் அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என தகவல்கள் வந்துள்ளது.

    அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, பணியில் சேர விதிக்கப்பட்ட தடை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு, பணியில் சேருவதற்கான உத்தரவு ஒரிரு நாளில் பிறப்பிக்கப்படும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    2014-15ம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்று நீதிமன்ற தடையால் அப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. தற்பொழுது அத்தடை இன்று நீதிமன்றத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டதால் விரைவில் அப்பணியிடத்தில் ஏற்கெனவே கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு பெற்ற தலைமையாசிரியர்கள் விரைவில் சேர உள்ளதாக வெளியாகியுள்ளது.

    10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

    கடந்த செப்டம்பர், 25 முதல் அக்டோபர், 4ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.ஸி., துணைத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் சான்றிதழ்கள், தேர்வு எழுதிய மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

    தலைமை பண்பு வளர்த்தல் குறித்த ஐந்து நாள் பயிற்சி

    அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், தலைமை பண்பு வளர்த்தல் குறித்த, ஐந்து நாள் பயிற்சி துவங்கியது.

    பிளஸ் 2 பொதுத்தேர்வு வினா - விடை புத்தகங்களை அனைத்து மாவட்டங்களிலும் விற்க உத்தரவு

    பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

    ஆசிரியர் பயிற்சி கல்விக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத் திட்டம்!


    ஆசிரியர் பயிற்சி கல்விக்கு, அடுத்த ஆண்டு முதல், புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் தேர்வு மதிப்பீடு முறையில் மாற்றம், மாணவர்களின் செயல் வழியிலான அணுகுமுறை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளிட்ட, பல புதிய திட்டங்களை அமல்படுத்த, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

    Interim Relief and Merger of DA Issue - Holding of National Convention of the National Council (JCM)(Staff Side) 11th December 2014

    The Staff Side, JCM National Council had, as desired by the 7th CPC, submitted a separate memorandum on Interim Relief and Merger of DA, copy of which had also been sent to the Finance Ministry. During the Informal Discussions the Staff Side had with the Pay Commission, they had assured us to take up the issue with the Government seeking amendment to the Terms of Reference to enable them to act upon our memorandum. We have received reply from the Finance Ministry, which is indicative of a refusal of both the demands. The NDA Government has adopted the same plea made by the UPA II Government to reject our demands. The 7th CPC have so far not communicated to us, the decision they have taken on our memorandum.

    இடை நிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; அனைத்திந்திய ஆசிரியர் பேரவை வலியுறுத்தல்


    பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் பேரவை கோரிக்கை


    SSTA சார்பில் தொடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று இறுதிகட்ட விசாரணை!!!

    SSTA சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளன.அதில் ஒன்று (WP 10546/2014) இன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் இறுதிகட்ட விசாரணை பட்டியலில் உள்ளது. இன்று அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டால் சில நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்.

    பிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம்: 34 Mbps எம்பிபிஎஸ்

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களில், இந்திய பிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம் 34 எம்பிபிஎஸ் (Mbps) எனத் தெரியவந்துள்ளது.

    Tuesday, October 28, 2014

    நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள்... கொத்தடிமைகளாய் பணிபுரியும் ஆசிரியர்கள்.... கவனிக்குமா கல்வித்துறை?

    fy;tp midtUf;Fk; vspjha; fpilf;f Ntz;Lk;> kf;fs; gbj;J tho;f;ifapy; cau Ntz;Lk; fpuhkGw ngz;fSk; gbj;J cah;T mila Ntz;Lk;. rpWghd;ik rKf kf;fs; gbf;fTk;> mth;fs; fy;tp epWtdj;jpy; vspjha; gzpia ngw Ntz;Lk; vd;w cahpa Nehf;fq;fSf;fha; Rje;jpuk; ngWtjw;F Kd;ghfNt jdpegh;fs;> rpWghd;ikapdh; fy;tp epWtdq;fis Njhw;Wtpj;J fy;tpgzpahw;wpl mDkjpf;fg;gl;lJ.  fy;tp epWtdq;fis Njhw;Wtpj;jth;fs; ,j;jifa Fwpf;Nfhis epiwNtw;w muRf;F cjtpaJld; ve;jtpj gyDk; vjph;ghuhky; rpyh; jdJ nrhj;Jfis vy;yhk; tpw;W nghJkf;fs; kPJ nfhz;l rKjha ghh;itahy; gs;spfis Vw;gLj;jp fy;tp tsh;r;rpapy; gq;nfLj;J te;jdh;.

    உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு நாளை இறுதி தீர்ப்பு வெளிவரும் என எதிர்ப்பார்ப்பு

    இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில், 2014-15ம் கல்வியாண்டுக்கான உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்று, வழக்கு நிலுவையால்  இதுவரை அப்பணியிடத்தில் சேர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுசார்பாக வழக்கை விரைவில் முடிக்க அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதையடுத்து நாளை இறுதி தீர்ப்பு வழங்கப்படும்

    2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 30.10.2014ம் தேதியும்,. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு 31.10.2014ம் தேதியும் நடைபெறவுள்ளது.

    2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 30.10.2014ம் தேதியும்,. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு 31.10.2014ம் தேதியும் நடைபெறவுள்ளது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

    W.P.(MD).NO.19113/2013 - ORDER REG CPS CLICK HERE...

    மதுரை மாவட்டம் மேலூரில் பள்ளிகல்வி துறையில் பட்டதாரி ஆசிரியராக 2007-ல் பணியில் சேர்ந்து 31.05.2012 -ல் ஓய்வு பெற்றார். இவர்  ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில்  ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

    IGNOU B.Ed 2014 Entrance Results

    பட்டதாரி ஆசிரியர்களைப் போல தேர்வுநிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றி வந்தால் அவர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டு அடுத்த நிலை பதவிக்குரிய சம்பளம் வழங்கப்படும். ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் பதவி, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இணையானதாக கருதப் பட்டு அதே ஊதிய விகிதம் (அடிப்படைச் சம்பளம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,600) நிர்ணயிக்கப்பட்டது.

    "பிரிட்ஜ் கோர்ஸ்' முறையில் மாற்றம்; ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

    "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில்கொண்டு வரப்பட்ட "பிரிட்ஜ் கோர்ஸ்' முறையில், மாற்றம் செய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரசு உத்தரவு வராததால் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலணி தேக்கம்

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணி வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இலவச காலணிகள் வழங்க தயாராக இருந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை : மத்திய அரசு தீவிர பரிசீலனை

    'புதிதாக, 'சிம்' கார்டு வாங்குவோர், ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாமா' என, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும், தொலை தொடர்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும், 'சிம்' கார்டுகளை, புதிதாக வாங்குவோர், தற்போது, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை அடையாள ஆவணமாகத் தருகின்றனர்.

    தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு

    தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.சரவணக்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நான் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவன். வழக்குரைஞராகப் பயிற்சி செய்து வருகிறேன்.

    சலுகை மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் தடை கோரி வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

    சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. உசிலம்பட்டி ஜீவரத்தினம் தாக்கல் செய்த மனு: பி.லிட்., -பி.எட்.,(தமிழ் பாடம்) படித்துள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 91 மதிப்பெண் பெற்றேன்.

    அரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல்: புது நடைமுறையால் திணறல்

    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ''ஊழியர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்காத நிலையில் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    துறைத் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

    இடைநிலை ஆசிரியர்கள்

    1. 004 - Deputy Inspectors Test-First Paper
    (Relating to Secondary and Special Schools) (without books)

    2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
    (Relating to Elementary Schools) (Without Books)

    3. 119 - Deputy Inspector’s Test
    Educational Statistics (With Books).

    4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
    (or)
    114 The Account Test for Executive Officers (With Books).

    5 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
    (Previously the District Office Manual--Two Parts) (With Books).

    பட்டதாரி ஆசிரியர்கள்

    1 . 176 - Account Test for Subordinate Officers - Part I .
    (or)
    114 The Account Test for Executive Officers (With Books).
    2 . 208 - The Tamil Nadu Government Office Manual Test
    (Previously the District Office Manual--Two Parts) (With Books).

    Monday, October 27, 2014

    தன் அறிவுக்கேற்றாற்போல் தேர்வெழுதும் மாணவர், மனப்பாட மாணவரை விட பின்தங்கி விடுகிறார்"

    சென்னை பல்கலையில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி, மாணவர்களுக்கான ஆலோசனை - வழிகாட்டி மையங்களில் செயல்பட்ட, அனுபவம் மிக்க சமூகப்பணி துறை தலைவரும், உளவியல் பேராசிரியருமான சுவாமிநாதனிடம் பேசியதில் இருந்து.

    ஆசிரியர்கள் சிறப்புநிலை குறித்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: கல்வி துறை செயலாளருக்கு நீதிபதிகள் கண்டனம்

    சென்னை ஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பல ஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில், ‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் நீண்ட கால பணி செய்யும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கவேண்டும். ஆனால், சில ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டதால், பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    கணினி அறிவியல் முடித்த பட்டதாரிகளின் பட்டியல் (இன வாரியாக)

    தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனசிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோர்ரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

    தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று நடைபெறுவதற்கு பதிலாக 29.10.2014 சென்னையில் நடைபெறுகிறது.

    மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு 20% தொகையை இடைகால நிவாரணமாக வழங்க கோரிக்கை; தேசிய மஸ்தூர் யூனியன்

    The National Mazdoor Conference has urged the Chairman of the newly formed 7th Pay Commission recommend that 20% interim relief be given to all Central and State Government employees.  

    National Mazdoor Conference has also strongly demanded that these recommendations be submitted to the new government that is likely to form at the Centre.

    The NMC President, Subhash Shastri said in a letter to 7th Pay Commission that along with the State and Central Government employees, the interim relief of 20% of basic pay be also extended to pensioners too and that these demands be recommended as soon as the Election Commission’s restrictions(Model Code of conduct Rules) end. 

    குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்!

    வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம்.அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான்.அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.www.puradsifm.com‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்தஅடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது.

    CPS ஒப்புகை சீட்டு (A/C SLIP) தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுவிட்டதா??

    தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் (CPS) 01.04.2003 பின்  நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும்) அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு          (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது, இதனை மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் கவனத்திற்கு 10.09.2014 அன்று நேரில் SSTA மாநில பொறுப்பாளர்கள் கொண்டு சென்றனர். இயக்குனர் அவர்கள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014 உத்தரவிட்டார்.

    தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களுடன் சப்-கலெக்டர் கலந்துரையாடல்

    பரமக்குடி கல்வி மாவட்ட அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில், காலாண்டு தேர்வில் முதல் மூன்று இடம்பெற்ற மாணவ, மாணவிகளுடன் சப்-கலெக்டர் சமீரன் கலந்துரையாடினார்.

    மேலாண்மை படிப்புகளுக்கிடையிலான வித்தியாசம் மற்றும் அங்கீகாரம்

    நாம் மேற்கொள்ளும் முதுநிலை மேலாண்மைப் படிப்புகளில், எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., பி.ஜி.பி.எம்., மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு என்று பலவகைகள் இருக்கின்றன. அந்தப் படிப்புகளை அங்கீகரிப்பதற்கென்று, பலவிதமான ஏஜென்சிகளும், அமைப்புகளும் உள்ளன.

    ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைகால தடை. மதுரை கிளை உத்தரவு.

    அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.அதில் கூறி இருப்பதாவது:–அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளது.அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பொருத்தமட்டில் ஆதிதிராவிடர், அருந்ததியினர் ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்

    தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.

    National Eligibility Test | நெட் தேர்வு!!

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (Teacher Eligibility Test-TET) தேர்ச்சி பெற வேண்டும். இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் “ஸ்லெட்” (State Level Eligibility Test) அல்லது “நெட்” (National Eligibility Test) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

    விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை பள்ளி செயல்பட்டால் சத்துணவு கிடையாதா?

    மதுரை மாவட்டத்தில் அக்.,25ல் (சனி) செயல்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு

    புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  இனி ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம்  -பற்றிய பதிப்பு வெளியிடப்படும்   -இந்த வாரம் சேலம் மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள்.

    SALEM DISTRICT CPS AFFECTED TRS LIST CLICK HERE...

    அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர்.

    பள்ளிக்கல்வி இயக்குநரின் உறுதியை ஏற்று அக். 29ம் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    ஆதார் அடையாள அட்டையை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏற்கத்தக்க அடையாள ஆவணமாக கருத வேண்டும்

    இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ''ஒரு நபருக்கு ஒரு அடையாள எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதாலும், கை ரேகை, கண் கருவிழி உள்ளிட்டவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்படுவதாலும், ஆதார் அட்டையை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் நிரப்ப கோரிக்கை

    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என,தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சை மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    Sunday, October 26, 2014

    நுகர்வோரே விழித்திரு ! உங்களுக்கு தெரியுமா??

    உங்கள்
    மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா
    ???
    ______________________________
    NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும்
    ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக
    ஒத்து கொண்டுள்ளார்கள்.
    _____________________________
    உங்கள்
    மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா
    ???
    FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம்
    இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ
    கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில்

    ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.

    652 Computer Science Cut Off Seniority

    MBC/BC/OC- 22.08.2008
    BCM- 17.8.2009
    SC 24.4.2008.
    SCA - 20.12.2010.

    பெற்றோர் - மாணவர் - ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் என்ன?

    சென்னை பல்கலையில், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி, மாணவர்களுக்கான ஆலோசனை - வழிகாட்டி மையங்களில் செயல்பட்ட அனுபவம் மிக்க, சமூகப்பணி துறை தலைவரும், உளவியல் பேராசிரியருமான சுவாமிநாதனிடம் பேசியதில் இருந்து...

    பொதுத்தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை : தொடர் அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு தேர்வுத்துறை கெடு

    தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், தங்களது தொடர் அங்கீகாரத்தை வரும், 31ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால், சம்பந்தப்பட்ட பள்ளி பொதுத்தேர்வு மாணவரின், தேர்வு எழுதுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    இணைய குற்றங்கள்

    1.குறுந்தகவல்களை மொத்தமாக பலருக்கு ஒரே சமயத்தில் அனுப்ப, இலவச எஸ் எம் எஸ் சேவை தரும் தளங்கள் உள்ளன. அவற்றில் நம் எண்ணைப் பதிந்துவிட்டால், அவர்கள் ஒரு பாஸ்வேர்டு தருவார்கள். அதன் பின் கம்ப்யூட்டரில் அந்த தளத்தில் பாஸ்வேர்டை உள்ளிடுவதன் மூலம், தகவலை அனைவருக்கும் ஒரே சமயத்தில் அனுப்பலாம்.

    கற்றல் குறைபாடுக்கு சலுகை தீர்வாகுமா? துவக்கநிலை பயிற்சி அவசியம்

    கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு ஏற்படும், 'டிஸ்லெக்சியா' பாதிப்புக்கு, பொதுத்தேர்வின் போது சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக, துவக்க கல்வி நிலையிலே, மாணவர்களின் நடவடிக்கையை கண்காணித்து, பயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    பொதுத்தேர்வை ஒரே சமயத்தில் நடத்த முட்டுக்கட்டை : சிக்கன நடவடிக்கைக்கு மாவட்ட அதிகாரிகள் எதிர்ப்பு

    பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் ஏற்படும் செலவினங்களை குறைக்க, சிக்கன நடவடிக்கையாக, ஒரே சமயத்தில் தேர்வை துவக்க தேர்வுத்துறை ஆலோசித்து வரும் நிலையில், அதற்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, முட்டுக்கட்டையாக உள்ளனர்.

    பிளஸ் 2 படிக்காத ஆசிரியருக்கு பதவி உயர்வு : பள்ளி கல்வித் துறை நடவடிக்கை

    பிளஸ் 2 படிக்காமல், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியரை, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்காமல் தடை போட்ட தமிழக அரசு, தற்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 'இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி, பிளஸ் 2 படிப்பிற்கு நிகரானது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், பிளஸ் 2 படிக்காத இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக, பதவி உயர்வு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் : ஐகோர்ட் உத்தரவு

    'குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து, அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மங்களாபுரம் சுப்பையா, 78, தாக்கல் செய்த மனு: பழநி அருகே, அரசு உதவி பெறும் பள்ளியில், 1955ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிந்தேன். குடும்ப சூழ்நிலையால், 1972ல் ராஜினாமா செய்தேன்.

    பள்ளிக்கல்வி - தொழிற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய விகிதம் திருத்தியமைப்பு, தேர்வு நிலை / சிறப்புநிலை பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதம்தொடர்பான தெளிவுரை

    மழை கால நடவடிக்கைகள் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு

    மழை காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    Saturday, October 25, 2014

    பள்ளிக்கல்வி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட்.,கல்வி தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற இயலாத நிலையில் எம்.பில் / பி.எச்.டி / பிஜிடிடிஈ இவற்றில் ஏதேனும் 2 கல்வித் தகுதிக்கு இரு ஊக்க ஊதியம் வழங்கும் பட்சத்தில் பயன் பெறக்கூடிய ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு

    நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதாக தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளதாக தகவல்

    தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க இதழான ஆசிரியர் இயக்கக் குரலிலும், நேர்முகமாகவும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி வந்தோம்.

    அந்தோ பரிதாபம் என்ற தலைப்பில் காலியாக உள்ள உ.தொ.க.அ. காலிப் பணியிடங்களின் பட்டியலை வெளியிட்டு வந்தோம். 25-10-2014 அன்று நடைபெற்ற உ.தொ.க.அ. பணிமாற்ற கலந்தாய்வில் 64 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உ.தொ.க.அலுவலர்களாக பணி மாற்ற ஆணை வழங்கியுள்ளார்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய TATA சார்பில் வழக்கு தொடர முடிவு

    இன்று (25.10.2014) TATA  சங்கத்தின் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானமாக புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய  ஓய்வூதிய திட்டம் வேண்டி வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது.

    தற்பொழுது பொழிந்து வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால் 25.10.2014 மற்றும் 26.10.2014 ஆகிய இரண்டு நாட்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் தத்தம் தலைமையிடத்தில் தங்கியிருந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

    பால் விலை உயர்வு விபரம்

    Displaying IMG-20141025-WA0053.jpg

    ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியது : தமிழக அரசு

    ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். பசு தீவனம், இடு பொருட்கள் விலை கனிசமாக உயர்ந்துள்ளதை அடுத்து பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

    'மெட்ராஸ் ஐ' - கண் நோய் பாதிக்காமல் தடுப்பது எப்படி? அகர்வால் கண் மருத்துவமனையின் டாக்டர் விளக்கம்

    மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக்கூடிய கண் நோய் சென்னையில் வேகமாக பரவுகிறது. இந்த நோய் கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் வரக்கூடியது. ‘அடினோ’ என்ற வைரஸ் கிருமி மூலம் கண் நோய் பரவுகிறது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் நோய் பாதித்த பலர் சிகிச்சை பெற்று செல்வதை காண முடிகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இது பாதிக்க கூடியது.

    அரசு நடுநிலைப் பள்ளி ஈரச்சுவரில் மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு

    பிளஸ்2 பயிலாமல் பட்டயப் பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உத்தரவு

    பெருகிவரும் குழந்தைக் கடத்தல்கள்: ஆண்டொன்றுக்கு காணாமல் போகும் 45 ஆயிரம் பேர் - கோடிகளில் புரளும் வியாபாரம்

    குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் நம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அனைத்து போலீஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங் களிலும் காணாமல் போன சிறுவர், சிறுமியர்களின் புகைப்பட விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாவதை பார்த்தாலே இதன் தீவிரம் புரியும். ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 44,475 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள் அறிவிப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல்

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடத்திற்கு பரிந்துரை பட்டியல் அனுப்பப்பட உள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மூலம் 652 தொழிற்கல்வி பயிற்றுநர் (கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்) காலி பணியிடத்திற்கு, மாநில அளவில் பரிந்துரை செய்திடும் பொருட்டு உத்தேச பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.

    தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு

    ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; கடந்தாண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி வழங்கப்பட்டுள்ளது.

    இழப்பை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளி நடத்த தலைமையாசிரியர்கள் முடிவு

    கனமழை காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில், ஒரு வாரமாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக, இழப்பு ஏற்பட்ட பள்ளி வேலை நாட்களை ஈடு செய்ய, இனி, வாரந்தோறும் சனிக்கிழமைகளில், பள்ளிகளை நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

    பின்தங்கிய மாணவர்களுக்கான பிரிட்ஜ் கோர்ஸ் திட்டம் எப்போது துவங்கும்?

    உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பின்தங்கிய மாணவர்களுக்கு, குறைந்தபட்ச பாடத் திட்டங்களை மட்டுமே நடத்தி தேர்ச்சியடைய செய்வதற்கான, பிரிட்ஜ் கோர்ஸ் திட்டம், நடப்பாண்டு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    மத்திய அரசு ஊழியர்கள் இடைகால நிவாரணம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளனவா ???

    Is Interim Relief Likely for Central Government Employees? Is it really possible for Central Government employees to get an interim relief this time? Let us look at it in detail. ‘Interim Relief’ may be defined as the temporary relief given to employees before the new Pay Commission’s recommendations are implemented. ‘Interim relief will be treated sui generis’, most of the Finance Ministry orders included the sentence when sanctioning interim relief.

    முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும்.

    முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்திநிரப்ப வேண்டும்,' எனதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது. அதன் மாவட்ட தலைவர் சந்திரன் கூறியதாவது:மாநிலத்தில் 100 அரசு பள்ளிகள் மேல் நிலையாக தரம் உயர்த்தப்பட்டன. அவற்றில் ஏற்பட்ட 900 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

    எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அவசியமா? மாநிலங்களின் கருத்தை கேட்கிறது மத்திய அரசு

    இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) படி, 'எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி' என்ற நிலையால், அந்தந்த வகுப்பிற்குரிய திறனை பெறாமல், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு மாணவர் வந்துவிடுவதால், பெரிய வகுப்புகளில், மாணவர் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பள்ளி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு சுமார் 70 ஆயிரத்து 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளிகளில் 2753 ஆசிரியர்கள் உள்ளனர். இதையடுத்து 129 அரசுப்பள்ளிகளில் 27 ஆயிரத்து 900 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.இங்கு 2180 ஆசிரியர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கல்வித்துறையானது அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 619 ஆசிரியர்களும் , அரசுப்பள்ளியில் 391 ஆசிரியர்களும் உபரியாக உள்ளதாக அறிவித்தது.

    கல்விச் சான்றிதழ்களில் சாதி, இடஒதுக்கீடு விவரங்கள் குறிப்பிட சிபிஎஸ்இ தடை

    மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட கல்விச் சான்றிதழ்களில் மாணவர்களின் சாதி மற்றும் இடஒதுக்கீடு தொடர்பான விவரங்களை குறிப்பிடுவதற்கு சிபிஎஸ்இ தடை விதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பை முடிக்கும்போது அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும். அதில் அவர்கள் படித்த பள்ளியின் பெயர், படிப்பு காலம், அங்க அடையாளங்கள், சாதி பெயர், இடஒதுக்கீடு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி) ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

    அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் "மாநிலப் பொதுக்குழு கூட்டம்"நாளை 26.10.2014அன்று வேலூர் மாவட்டம் "ஆம்பூரில்" உள்ள "கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்" காலை 10.00 மணியளவில் நடைப்பெற உள்ளது.

    அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் "மாநிலப் பொதுக்குழு கூட்டம்"நாளை 26.10.2014 அன்று வேலூர் மாவட்டம் "ஆம்பூரில்" உள்ள "கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில்" காலை 10.00 மணியளவில் நடைப்பெற உள்ளது. அவ்வமயம் அனைத்து வட்டார, நகர, பொறுப்பாளர்கள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்..

    Friday, October 24, 2014

    தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

    தொட்டக்கக் கல்வி - மைய அரசின் கரும்பலக திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளிகளில் 1610 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜுன் 2014 முதல் செப்டம்பர் 2014 வரை ஊதியம் பெற்று வழங்குவதற்கான ஆணை

    சைனிக் பள்ளி: 2015-16ம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு

    இடி–மின்னலின் போது திறந்த ஜன்னல் அருகே நிற்கக்கூடாது: மின்வாரியம் அறிவுரை

    செகமம் மின் வாரிய அலுவலகம் சார்பில் தற்பொழுது பெய்து வரும் பருவ மழையினால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து நோட்டீஸ் விநியோகம் நடந்தது. 10 இடங்களுக்கு மேல் விழிப்புணர்வு குறித்து தட்டிகளும் வைக்கப்பட்டன.

    பேராசிரியர்களின் சான்றிதழ்களை திரும்பத் தராமல் அலைக்கழிக்கும் தனியார் கல்லூரிகள்

    பெரும்பாலான தனியார் கல்லூரிகள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு, அவசரத் தேவையின்போது தர மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. சில கல்லூரிகள், சான்றிதழ்களைத் திரும்பக் கேட்பவர்களின் அவசரத்துக்கு ஏற்ப பிணையத் தொகையை உயர்த்தி வாங்கிக்கொண்டு, சான்றிதழ்களைத் தருவதாகவும் தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    ஓய்வூதிய நிதி யாருக்காக?

    புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள்  மற்றும் அரசூழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு ? எத்தகைய ஓய்வூதியம் ? என வரையறுக்கப்படாத நிலையில் PFRDA -ன் தலைவருக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகம் 20.08.2014-ல் Government Gazette-ல் வெளியிடப்பட்டது. அதன்படி

    ஒரு மாதம் ஊதியம்  -4.5 லட்சம்- ரூபாய்
    T.A-வாக மாதம்  -80,000 ரூபாய்
    L.T.C-80,000 ரூபாய்
    ஈட்டிய விடுப்பு வருடத்திற்கு -30 நாட்கள்
    தொலைபேசிக்கு -80,000 ரூபாய்
    அதே போல் PFRDA முழு நேர உறுப்பினர்களுக்கு 3.75 லட்சம் ரூபாய் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

    பள்ளிக்கல்வி - ஓர் ஆசிரியர் வாரத்திற்கு குறைந்தபட்சம் 24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது

    ஆசிரியர் பற்றாக்குறையால் சரிந்தது மாணவர் சேர்க்கை

    அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்தது.

    பள்ளிகளில் கழிப்பறை தேவை குறித்து பட்டியல் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

    அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தேவை குறித்த இறுதி பட்டியல் தயாரித்து அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்.

    அடுத்த ஆண்டு நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்குதகுதியான தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட, தேர்வுத்துறை சேவை மையங்களில், ஆன்லைனில் பதிவு செய்யவேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

    4 பேர் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

    வேலூரில் உள்ள அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று பதவி ஏற்றார். 4 பேர் முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- கரூர் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பொன்னம்மாள் பதவி உயர்வு பெற்று, கரூர் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை, திரும்ப பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 1987 செப்டம்பரில், இடைநிலை ஆசிரியராக, மீனலோசினி என்பவர், நியமிக்கப்பட்டார். அப்போது, பி.ஏ., மற்றும் பி.எட்., பட்டம் பெற்றிருந்தார்.

    ஜனவரி- 2015 ல் அகவிலைப்படி எவ்வளவு ஓர் அலசல் ?

    Now, the next episode begins...'Expected DA from January 2015'


    It is highly unlikely that there will be a two-digit DA hike in the next two instalments 
    (January 2015 and July 2015). Kindly keep in mind the fact that despite a 6 point 

    increase of the AICPIN from 246 to 252 for the month of July 2014, there was hardly 
    an impact. Even if it increases by 3 points over the next five months, the DA would
     increase to 9% only. It is impossible for AICPIN to constantly increase in future.  

    தமிழகம் முழுவதும் 300 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலைநீடித்து வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல இந்த ஆண்டு 100 உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாக தரம் உயர்த் தப்பட்டுள்ளன.

    அரசு ஊழியர் மற்றும்ஆசிரியர்களுக்குமிடையே சில வேறுபாடுகள்

    1.அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே.

    2.ஆசிரியர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களுக்கு மட்டுமே கோடை விடுமுறைப்பணியாளர்கள்.

    கனமழை: 3மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக  3மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பபட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்

    Thursday, October 23, 2014

    பொது பணிகள் - இணை கல்வித் தகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER TRAINING), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு

    மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதிய குழுவிற்கு முன் மற்றும் ஊதிய குழுவில் நிறைவேற்ற வேண்டியவைகள் குறித்து ௯ட்டம்

    7வது ஊதிய குழுவிற்க்கு முன் அகவிலைபடி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க,இடைக்கால நிவாரணம் ,தன்பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் போன்றவை குறித்து மத்திய அரசு ஊழியர்கள்  ௯ட்டம்.

    திருவள்ளூரில் 8 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு

    திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 8 உயர்நிலைப் பள்ளிகள் 2014- 15ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார்.

    காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    காரைக்கால் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ‘சுய கற்பனையால் கட்டப்படுவது தான் படைப்பாற்றல்’

    ”முழுவதும் சுய கற்பனையால் கட்டப்படுவது தான் படைப்பாற்றல்,” என, சங்கீத நாடக அகாடமியின் உறுப்பினர், பப்பு வேணுகோபால் ராவ் பேசினார். சென்னையில், சாய் பிரபஞ்ச் என்ற, கல்லூரி மாணவர் எழுதிய ’கான்ட்ராக்டர்’ என்னும், ஆங்கில நாவல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, பப்பு வேணுகோபால் ராவ் பேசியதாவது:

    5 ஆயிரம் பணியிடங்களுக்கு ஒருவாரத்தில் 3 லட்சம் விண்ணப்பம்

    தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள 4,963 குரூப் 4 நிலையிலான வேலைக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்தில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மொத்தம் 12 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்கு னர் பணிகளில் காலியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த 21.7.2013 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதன் திருத்தப்பட்ட தேர்வு முடிவு 9.1.2014 மற்றும் 10.4.2014-ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் வெளியானது.

    'நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி

    கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஆன் லைன் வசதியை பயன்படுத்த வேண்டுகோள்!

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆன் லைன் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2015ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் சுருக்க முறைத் திருத்தத்தை ஆன் லைன் வழியாகச் செய்வதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முக்கியத்துவம் தருகிறது. வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முறை 15ஆம் தேதி தொடங்கியது. 1.1.15 அன்று வரை 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள், வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு ஆன் லைனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    UGC: National Eligibility Test (NET)

    The Central Board of Secondary Education announces holiday of the National Eligibility Test (NET) on 28th December 2014 (sunday) for the eligibility of Assistant Professors only or Junior Research fellowship and Eligibility for Assistant Professor both in Indian Universities and Colleges 
    CBSE will conduct NET in 79 Subjects and 89 selected NET coordinating Institutions
    spread  across the country
    Candidates should apply for NET Dec2014 Online only through website

    Wednesday, October 22, 2014

    7th Central Pay Commission's visit to Mumbai from 6th Nov to 8th Nov 2014

    ▪The Commission has,in its first phase of interaction , been seeking the views of various stakeholders on its terms of reference. To this end, meetings have been held in Delhi with various organisations and heads of various agencies.

    உண்மைத்தன்மை அறிய பல்வேறு பல்கலைகழங்களில் வசூலிக்கப்படும் கட்டண விவரம்

    University /Board Fee charged per Certificate To be paid by Demand Draft in favour of
    1 Alagappa University Rs. 250/- per certificate Registrar, Alagappa University,Payable at Karaikudi.

    2 Allahabad University Rs. 1000/- per certificate Registrar, Allahabad University, Allahabad

    3 Acharya Nagarjuna University Rs. 500/-per certificate Registrar, Acharya Nagarjuna University, Gantur (A. P.)

    4 Annamalai University US $ 50/- per Certificate Controller of Examinations, Annamalai University, AnnamalaiNagar

    ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு

    ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் <ஆசிரியர் பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; கடந்தாண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி வழங்கப்பட்டுள்ளது. நிய மனம் செய்யப்பட்டவர்கள், தகுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், இணையதளத்தில் தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

    உண்மைத் தன்மை சான்றிதழ் தபாலில் அனுப்ப தடை : தேர்வுத்துறை அறிவிப்பு

    'ஆசிரியர், பணியாளர்களின், உண்மை தன்மை அறிதல் கோருதல் சார்பான கடிதங்களை அஞ்சல் வழி அனுப்பக்கூடாது' என தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களிடமிருந்து, மேல்நிலை, இடைநிலை தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோருதல், மதிப்பெண் சான்றிதழ்களை தொலைத்து

    ஜெ., அறிவிப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள் : ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி

    '50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலையாக தரம் உயர்த்தப்படும்' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தது, இதுவரை வெறும் அறிவிப்பாகவே உள்ளது. 'மாணவர்கள் நலன் கருதி ஆண்டுதோறும் 100 மேல்நிலைப்பள்ளிகள், 50 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்' என 2014 ஜூலை??ல் நடந்த கல்வி மானியக் கோரிக்கையில் அப்போதய முதல்வர் ஜெ., அறிவித்தார். முதுகலை ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை தொடர்ந்து, தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது; ஆனால், உயர்நிலைப் பள்ளிகள் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

    பதவி உயர்வு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அக்.25 ல் கலந்தாய்வு

    ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்குரிய முன்னுரிமை பட்டியல், கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. 2008 ம் ஆண்டு, டிச., 31யை தகுதி நாளாக கொண்டு இப்பட்டியலில் 195 பேர் இடம் பெற்றனர். இதில், ஒன்று முதல் 30 வரை உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்கப்பட்டது.

    இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!

    தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி வீராங்கணை

    சர்வதேச பட்டியலில் இடம் கிடைத்தும் தெற்காசிய பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இ.ஆவாரம்பட்டி நீலாவதிக்கு, 30, வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    வாசற் கதவை தட்டுமா வேலை?

    70 சதவீதத்திற்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் ‘சிட்டி’யை விட்டு வெளியில் இருக்கின்றன. படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் ‘சிட்டி’யில் அமைந்துள்ளன. இந்த இடைவெளி கிராமப்புறங்களுக்கும், நகர்புறங்களுக்குமான வேலை வாய்ப்பில் வேறுபாட்டை உருவாக்குகிறது.

    "நுாலகங்களை நண்பனாக்கி கொள்ள வேண்டும்; அவைதான் அறிவின் கருவூலங்கள்"

    நுாலகங்கள்தான் அறிவின் கருவூலங்கள் என, அண்ணாமலை பல்கலையின் நுாலக அறிவியல் துறை தலைவர் நாகராஜன் பேசினார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து, சென்னை, பாரதி அரசு மகளிர் கல்லுாரியின் பொது நுாலகத் துறை, ஆராய்ச்சி படிப்பில், நுாலக தகவல் தொழில்நுட்ப துறையின் பங்கு என்ற கருத்தரங்கை நடத்தியது.

    தொடக்க நிலை வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கணிதப் பயிற்சி

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வள மையத்தில் தொடக்க நிலை வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கணித அடிப்படை திறன்கள் வளர்த்தல் மற்றும் கணித உபகரண பெட்டி பயன்படுத்துதல் பற்றிய பயிற்சி நடந்தது.

    ஆசிரியர்களுக்கு அடிப்படைத்திறன் மேம்பாட்டு பயிற்சி

    முகையூர் வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கு அடிப்படைத்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு பதிவுமூப்பு அறிவிப்பு

    ராமநாதபுரம், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர்களால் அறிவிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, பதிவு மூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்திருக்க வேண்டும். ஜூலை 1 அன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் 18-35 வயது வரை, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் 18-32 வயது வரை, பொது போட்டியாளர் 18-30 வயதுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    மருத்துவத்துறையில் போதிய ஆய்வுகளை மேற்கொள்ள டாக்டர்களுக்கு பிரதமர் அழைப்பு!

    டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு போதிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    4 பாடங்களுக்கான உதவி பேராசிரியர் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியீடு

    உதவி பேராசிரியர் தேர்வு பட்டியலில், ஆங்கிலம், விலங்கியல் உள்ளிட்ட நான்கு பாடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

    "திறன்மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்கும் புனித பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு"

    "ஒவ்வொரு ஆசிரியரும் சமுதாயத்தின் ஒளி விளக்குகள். திறன்மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்கும் புனித பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு" என மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி பேசினார்.

    மதுரையில் தினமலர் லட்சிய ஆசிரியர் 2014 விருதுக்கு தேர்வானவர்களுக்கு விருது வழங்கி அவர் பேசியதாவது: கல்வி மூலம்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற உண்மையை உணர்ந்து, ஆண்டுதோறும் இப்போட்டிகளை நடத்தி திறமையான ஆசிரியர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டும் உன்னத பணியை தினமலர் மேற்கொண்டு வருகிறது. இது, ஆசிரியர் சமுதாயத்திற்கு செய்யும் சேவை.

    Tuesday, October 21, 2014

    சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம்: தமிழக அரசு

    சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், கட்டாய கல்வி உரிமை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவலை, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தபடியே கண்காணிக்க புதிய APP

    B Safe - FREE APP to track your Children and Family Members - "bSafe"


    பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில் மடியில் நெருப்பு கட்டிகொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
    அவர்களின் கவலையை போக்க பி ஸேஃப் என்னும் புது வகை ஆப்பை ஆன்ட்ராயிட் / ஆப்பிள் பிளாட்பாரத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் பிள்ளைகளின் மொபைல் ஃபோனில் இதை இன்ஸ்டால் செய்து விட்டால் - கொஞ்சம் கவலை இல்லாமல் இருக்கலாம்.

    இந்த வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை?

    கனமழை மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக, பள்ளிகளுக்கு, இந்த வாரம் முழுவதும், விடுமுறை கிடைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நாளை 22ம் தேதி, தீபாவளி பண்டிகை. நாளை மறுநாள், 23ம் தேதி, பெண்கள் நோன்பு இருந்து, கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வர். 

    மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்:

    •தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி - பல்வேறு நோய்களை தடுக்கும்.

    •வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் - இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.

    •ஈரமான உடைகளை உடுத்தாதே - படை ஏற்படும்.

    •மழையில் நினையாதே - காய்ச்சல் வரும்.

    5% மதிப்பெண் தளர்வு செல்லும் தமிழ்நாடு அரசு அரசானையை மேற்கோள் காட்டி ஒரு கட்டுரை

    இலவச கட்டாய கல்வி சட்டப்படி 1 முதல் 8 வரை ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயம் தமிழகத்தில் 3 தகுதி தேர்வுகள் நடைபெற்றது இதில் 2013 ல் நடைபெற்ற தகுதிதேர்வில் முதலில் 60% சதவீதம் தேர்ச்சி என்றும் பிறகு 5% தளர் அளிக்கப்பட்டு 55% மதிப்பெண் எடுத்தால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றதாக தமிழக அரசு அரசானனை எண் 25ஐ வெளியிட்டது இந்த நிலையில் இதன் மூலம் பலர் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும பள்ளிகளில் வேலை பார்க்கிறார்கள். இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 5% மதிப்பெண் அரசானை 25 ஐ ரத்து செய்தனர்.

    தீபாவளி போனஸாக கார், வீடு, நகை ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுத்தார் சூரத் வைர வியாபாரி

    குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் உள்ள வைர நகை வியாபாரி ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், வீடு மற்றும் நகை
    ஆகியவற்றை தீபாவளி போனஸாக அள்ளிக் கொடுத்திருக்கிறார். சூரத் நகரத்தில் வசிப்பவர் சவ்ஜி தோலாக்கியா. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 70களில் வேலைதேடி சூரத்துக்கு வந்தார். அங்கு தன் உறவினர் ஒருவரிடம் சென்று வியா பாரம் தொடங்குவதற்குக் கடன் பெற்றார். அதை வைத்துக்கொண்டு அவர் சிறிய அளவில் வைர வியாபாரத்தைத் தொடங்கினார். 1992ம் ஆண்டு ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் எனும் வைர வியாபார நிறுவனத்தைத் தொடங் கினார்.

    கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!


    திருவாரூர், நாகை, திருச்சி, நீலகிரியின் நான்கு பகுதிகள், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சை மாவட்டம் மாவட்ட பள்ளிக்களுக்கு விடுமுறை.திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்களுக்கு மட்டும் 21.10.2014 விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

    Monday, October 20, 2014

    அ.தே.இ - இனி வருங்காலங்களில் எக்காரணத்தைக் கொண்டும், உணமைத்தன்மை அறிதல், மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம், இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் கோருதல் சார்பான கடிதங்கள் அஞ்சல் வழியே அனுப்ப கூடாததென இயக்குனர் உத்தரவு

    தொடக்கக் கல்விப் பணி - தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வில் 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

    அங்கன்வாடி பணியாளர்கள் இடமாறுதல் பெறுவதில் சிக்கல்

    அங்கன்வாடி குறு மையத்தில் இருந்து, பொது மையத்திற்கு இடமாறுதல் பெறும் அங்கன்வாடி பணியாளர்கள், சர்வீஸ் ரத்தாகும் என்பதால், அவர்கள் இடமாறுதல் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    உலகெங்கிலும் குழந்தைகளுக்காக போராடும் கைலாஷ் சத்யார்த்தி!

    இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசை, பாகிஸ்தான் சிறுமி மலாலாவுடன் இணைந்து பெற்ற மத்திய பிரதேசத்தை சேர்ந்த, கைலாஷ் சத்யார்த்தி, 60, குழந்தைகள் நலனுக்காக இந்தியாவில் மட்டுமின்றி, 140 நாடுகளில் போராடி வருகிறார்.

    சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கிறது டி.என்.பி.எஸ்.சி.

    டி.என்.பி.எஸ்.சி. தொகுதி நான்கில் அடங்கிய இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III பதவிகளுக்கு உரித்த காலிப் பணியிடங்களுக்கான, நான்காம், மூன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதி வரை, TNPSC அலுவலகத்தில் நடைபெறும்.

    பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

    வால்பாறையில் உள்ள பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளில், கோவை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா நேரில் ஆய்வு நடத்தினார். வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.ஏ., அலுவலகம், எஸ்.எஸ்.ஏ., உண்டு உறைவிடப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் நேரடி ஆய்வு நடத்தினார்.

    இந்திய விமானப்படையில் குரூப் - 3 பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம்

    இந்திய விமானப்படையில், குரூப் -3 பிரிவுக்கான ஆள்சேர்ப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 27ல் நடைபெறுகிறது.

    முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: விமானப்படை ஆள்சேர்ப்பு முகாமில், 1995 பிப்., 1ல் இருந்து, 1998 ஜூன் 30க்குள் பிறந்த, திருமணம் ஆகாத ஆண்கள் பங்கேற்கலாம்.

    அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.சு.ஈஸ்வரன் இயற்கை எய்தினார்

    அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச் சடங்கு இன்று மாலை இராமேஸ்வரம் மாவட்டம், உச்சிபுலி என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
    அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

    தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளருக்கு திருச்சி மாவட்ட கிளை சார்பில் இரங்கல்


    தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திரு.ஈஸ்வரன் மறைவுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுசெயலர் செ.முத்துசாமி ஆழ்ந்த இரங்கல்

    இயக்கம் ஒன்றாக இருந்தபோது தன்னுடன் இணைச்செயலராக பணியாற்றிய திரு ஈஸ்வரன் மறைவு செய்தி கேட்டு, தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை வருத்தமுடன் தெரிவித்துக்கொள்வதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி ,Ex.MLC  அவர்கள் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்

    பள்ளிகல்வி - உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணிவரன் முறை / தகுதிகாண் பருவம் / தேர்வு நிலை / சிறப்பு நிலை படிவங்கள் மற்றும் அதனுடன் இணைக்க வேண்டிய படிவங்கள்

    தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்; மெட்ரிக் கல்வித்துறை உத்தரவால் புது சிக்கல்

    பிளஸ் 2 படிக்காமல் பட்டப்படிப்பு முடித்த 6 பேருக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு

    பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு பயின்ற 6 ஆசிரியர்களுக்கு தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்து பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு 8 வாரங்களுக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. தர்மன், உமா உள்பட 6 பேர் 10-ஆம் வகுப்பு முடித்து, ஆசிரியர் பயற்சி பெற்றனர். அதன் பிறகு, கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டுகளில் ஓவிய ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.

    பள்ளிக்கல்வி - 23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

    கனமழை: 19 மாவட்டங்களுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக 19 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, நாகை, கடலூர், அரியலூர், கரூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், கடலூர், தூத்துக்குடி,
    தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    Saturday, October 18, 2014

    வெயிட்டேஜ் முறையின் குறைபாடுகளை அரசுக்கு எடுத்துரைக்க ஆசிரியர் சங்கங்கள் முன்வர வேண்டும்; ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் அமைப்பு வேண்டுகோள்

    ஒரு காட்டில் ஒரு பசு தனியாக மேய்ந்து கொண்டிருந்தது அந்த வழியாக வந்த கொடூர சிங்கம் பசுவின் மீது பாய்ந்தது, பசுவோ தன் உயிரை காக்க 30நிமிடம் போராடியது இறுதியில் பசுவை கடித்து கொன்று சாப்பிட்டது. மேலும் அந்த கொடூர சிங்கம் வேட்டையாட சென்றது அருகில் பத்து பசுக்கள் மேய்ந்தும் அதில் ஒன்று மட்டும் தனியே மேய்ந்து கொண்டிருந்தது..அதனை குறி வைத்து சிங்கம் பாய்ந்தது இதனை பார்த்து மற்ற பசுக்கள் தன் இனத்தை காக்க ஒன்று சேர்ந்து தனது கொம்பால் முட்டி சிங்கத்தை கொன்றது.

    பார்த்தீர்களா ஆசிரியர் சொந்தங்களே!!  ஒரு விலங்கு கூட தன் இனம் அழியாமல் இருக்க ஒன்று சேர்கிறது.

    Income Tax Slabs & Rates for Assessment Year 2015-16

    Income Slabs Tax Rates

    i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

    ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.

    மாணவியரின் உயர்கல்விக்கு 'உதான்' புதிய திட்டம் : மத்திய அரசு பள்ளிகளில் பயிற்சி

    மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி.,க்களில் சேருவதற்கு புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.