Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 29, 2014

    கோடை பண்பலை 100.5 ல் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஒலிபதிவு நிகழ்ச்சி

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான  கோடை பண்பலை 100.5ல் காலை 6.30 மணி முதல் 7.00 மணிக்குள் நடைபெறும் பூந்தளிர் நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான ஒலிபதிவு  நடைபெற்றது.
                                      
    நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை மாணவி ரூபா வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கோடை பண்பலை நிகழ்ச்சி அமைப்பாளர் பொன்.தனபாலன்,எட்வர்ட் கிங் ,சுப்பிரமணியன் ஆகியோர் மாணவ,மாணவியரிடம் அன்புடன் பேசி பூந்தளிர் நேரம் நிகழ்ச்சிக்கு பேட்டி எடுத்து ஒலிபதிவு செய்தனர்.மாணவ,மாணவியரும் வானொலியில் பேச போவதை  எண்ணி மகிழ்ச்சியாக பேசினார்கள். மாணவ,மாணவியர் பேசுவதற்கு ஆசிரியைகள் வாசுகி,கலாவல்லி,சாந்தி,முத்துலெட்சுமி ,முத்து மீனாள் ஆகியோர் பயற்சி அளித்தனர்.நிகழ்ச்சியில் கோடை பண்பலை நேயர் பேரவை காரைக்குடி காளிமுத்து,தேவகோட்டை முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர் கண்ணதாசன் நன்றி கூறினார். கோடை பண்பலை வானொலி 22 மாவட்டங்களில் இரண்டரை கோடி நேயர்களை சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments: