To get free Education Dept. Updated News & GOs type ON TNKALVII and send to 9870807070 or type ON SATISH_TR and send to 9870807070
Labels
- NEWS
- DIRECTOR PROCEEDINGS
- TET
- ASSN NEWS
- SSA
- COURT NEWS
- EDUCATION DEPT. GOs
- TIP
- TRB
- GO
- TNPSC
- PANEL
- CPS
- SSLC
- RESULTS
- DEE
- VI PC
- HSC
- CCE
- PAY ORDER
- RTI PROCEEDINGS
- DSE
- ANNOUNCEMENTS
- SCERT
- EXPECTED DA
- TNKALVI NEWS
- TETOJAC
- FORMS
- MODEL QNS
- PENSION
- TET QNS
- RMSA
- VII PC
- Dept. Exam
- RTE
- REG ORDER
- IT
- DA
- GK
- EMIS
- UPSC
- CEO VELLORE
- IT 2012-13
- RULE
- ANDROID
- FREE SMS REGISTRATION
- RARE GOs
- RL LIST
- NEP 2016
- NHIS
- SABL
Hot News
JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!
Friday, November 30, 2012
ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது - ஓரிரு வாரங்களில் பணியிட விவரம் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணியிடங்களை ஒதுக்க காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எவை எவை என்பது குறித்த இறுதி பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் திரட்டி வருகின்றனர்.
PG - TRB வழக்கு நிலுவை பற்றிய விவரம்
பல வழக்குகளை சந்தித்து இறுதியாக PG TRB க்கு இருமடங்கான தகுதியானவர்கள் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது. எப்படியோ... பிரட்சனைகள் எல்லாம் முடிந்து வேலை கிடைத்துவிடும் என்று
காத்திருந்த ஆசிரியர்களுக்கு கிடைத்ததோ இந்த முறையும் ஏமாற்றம் தான்.
Thursday, November 29, 2012
உடற்கல்வி ஆசிரியர்: டிச., 07ம் தேதி பணி நியமன கலந்தாய்வு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 47 பணிநாடுநர்களுக்கு பணி நியமனக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி
டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வட்டியுடன் மின்கட்டணம்: 300 அரசு பள்ளிகள் அதிர்ச்சி
மதுரை மாவட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாத, 300 அரசு பள்ளிகளுக்கு, வட்டியுடன் மீண்டும் கட்டண ரசீது அனுப்பி, மின்வாரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு அதிக தொகையை செலுத்த முடியாது என்பதால், வட்டியை ரத்து செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட பள்ளிகள் தரப்பில் மின்வாரியத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணம் பள்ளி தீவிபத்து: நஷ்டஈடு நிர்ணயிக்க ஒரு நபர் கமிஷன்
கும்பகோணம், பள்ளி தீ விபத்தில், பலியான மற்றும் காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு, வழங்க வேண்டிய நஷ்டஈடு எவ்வளவு என்பதை நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகத்தை, சென்னை ஐகோர்ட் நியமித்துள்ளது. ஆறு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க, ஒரு நபர் கமிஷனுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Wednesday, November 28, 2012
5-ம் வகுப்பு மாணவர் மொழிப் பாடத்தை புரிந்து வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்
5-ம் வகுப்பு மாணவர் தமிழ், ஆங்கில பாடத்தை புரிந்து வாசிக்கவும், வாசித்த கருத்தை தெளிவாக சொல்லவும் தெரிய வேண்டும் என்று வத்திராயிருப்பு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி கூறினார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வத்திராயிருப்பு வட்டார
கல்வித் துறையில் நிரப்பப்படாத 1,200 கருணை பணியிடங்கள்
கல்வித் துறையில், கருணை அடிப்படையிலான, 1200 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 15 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இயக்குனர், கூடுதல் இயக்குனர், சி.இ.ஓ., தொடக்க கல்வி அலுவலகங்களில் 15 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பணி நியமனங்களில், 25 சதவீத
நடைமுறைக்கு வராத அரசாணை : பார்வையற்ற பட்டதாரிகள் அவதி
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான, தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை இன்னும் நடைமுறைக்கு வராத நிலை தொடர்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கல்வி பயிலவும், பணியில் சேரவும், 1 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, 2006ல் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின் படி, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
கணிதத்திறன் மேம்படுவதற்கான ஒரு சிறந்த வழி!
மேதமேடிகல் டிரெய்னிங் மற்றும் டேலன்ட் சர்ச் ப்ரோகிராம்(எம்டிடிஎஸ்)
என்பது, முழுமையான கணிதத்தில், விரிவானதொரு கோடைகால படிப்பாகும்.
இப்படிப்பானது, கணித சிக்கல்களைத் தீர்ப்பதற்கான திறனை அளிக்கிறது.
இந்தியாவின் சிறந்த பல்கலைகள்
2012ல் இந்தியாவில் உள்ள பல்கலைகளில், பாடப் பிரிவுகள், சிறப்பு தகுதி, சேர்க்கை முறை, மாணவர்கள், ஆசிரியர்களின் கல்வியறிவு, தேர்ச்சி விகிதம், தேர்வு முறை முதலியவற்றை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடும் சிறந்த பல்கலைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 45 இடங்களை பெற்ற பல்கலைகள்
1. டில்லி பல்கலை டில்லி
2. ஜவஹர்லால் நேரு பல்கலை டில்லி
3. பனாரஸ் இந்து பல்கலை வாரணாசி
4. கோல்கட்டா பல்கலை கோல்கட்டா
1. டில்லி பல்கலை டில்லி
2. ஜவஹர்லால் நேரு பல்கலை டில்லி
3. பனாரஸ் இந்து பல்கலை வாரணாசி
4. கோல்கட்டா பல்கலை கோல்கட்டா
64 உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நவ., 30 கடைசி
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பயிற்றுவிக்கப்படும் 64 வகையான உடற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியை படுகொலை : 332 பள்ளிகள் காலவரையின்றி மூடல்
தலைமை ஆசிரியை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, காலவரையின்றி பள்ளிகளை மூடுவதாக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. தாய்லாந்தில் புத்த மதத்தினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. தென் பகுதியில் வன்முறை ஏற்பட்டதில் பல இடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பதற்றம்
எம்பிபிஎஸ் தேர்வுக்கு புதிய மதிப்பெண் முறை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம்
எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வகுத்து இருந்த புதிய தேர்வு மதிப்பெண் முறையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முப்பருவ கல்வி: புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற டிசம்பர் 7 கடைசி நாள்
முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிசம்பர் 7ம் தேதி கடைசி நாளாகும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Tuesday, November 27, 2012
கலை பண்பாட்டு பாடங்களுக்கு ஆசிரியர் பதிவு மூப்பு மூலம் நியமனம்
சென்னை கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் குரலிசை, தேவாரம், வயலின், நாதஸ்வரம், பரதநாட்டியம் மற்றும் தவில் பாடங்களுக்கு, ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பள்ளி கல்வி விளையாட்டு கட்டணம் உயர்த்த கோரும் வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு
கல்வி விளையாட்டு என்ற பெயரில் பள்ளியில் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. பள்ளிக் கல்வி வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். கல்வி விளையாட்டு
இலவச கல்வி தரும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பிரசாரம்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி தரும் அரசு பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மதுரை நிர்வாகி அருண்குமார் தலைமையில் ஏராளமானோர் இந்த துண்டு பிரசுரங்களை மாவட்டத்தின் பல்வேறு
மாற்றுப்பணியால் பணிச்சுமை ஆசிரியர் பயிற்றுநர்கள் தவிப்பு
ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலை யில் தங்களுக்கு முதுகலை ஆசிரியர் மாற்றுப்பணி வழங்குவது மேலும் சுமையை அதிகரித்துள்ள தாக ஆசிரியர் பயிற்றுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் ஆய்வு, ஆசிரியர்களுக்கு பயிற்சி, தகவல்கள், மாணவர்கள், பள்ளிகள்
கிராம பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்கள் அதிகரிப்பு
கட்டாயக்கல்வி சட்டம் அமல்படுத்தி, இரண்டாண்டுகளாகியும், பள்ளியில் இடைநிற்கும், மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. தீவிர நடவடிக்கை இல்லாததால், கிராமப்பகுதிகளில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வி.ஏ.ஓ., தேர்வு முடிவை வெளியிட தடை கோரி மனு
வி.ஏ.ஓ. தேர்வு முடிவை வெளியிட தடை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
Monday, November 26, 2012
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் மற்றும் பல்வேறு மாநில ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் ஒரு ஒப்பீடு.
*INDIAN GOVT FRAME RTE RULES-
*NCTE FRAME TET TEST TIME 1.30HOURS.BUT ANDHRA GOVT ANALYS THIS PROBLEM AND ANDHRA GOVT FIX 2.30HOURS FOR TET EXAM.ANDHRA GOVT FIX 2.30HOURS FOR TET EXAM&TAKE ACTION BEFORE TET EXAM.
>6-8th STD TEACHERS APPT THROUGH TET.BUT INDIAN GOVT NOT FRAME RULES FOR 9-10th std TEACHERS APPT THROUGH TET.
SO THE KERALA GOVT ANALYS THIS PROBLEM AND KERALA GOVT CONDUCT A COMPETITIVE EXAM FOR 9-10th STD TEACHERS.*NCTE FRAME TET TEST TIME 1.30HOURS.BUT ANDHRA GOVT ANALYS THIS PROBLEM AND ANDHRA GOVT FIX 2.30HOURS FOR TET EXAM.ANDHRA GOVT FIX 2.30HOURS FOR TET EXAM&TAKE ACTION BEFORE TET EXAM.
பள்ளிகளில் அடுத்த வாரம் முதல் வெஜிடபிள் பிரியாணி
சென்னை மற்றும் ஸ்ரீரங்கம் பள்ளிகளில் அரசின் உத்தரவுப்படி அடுத்த வாரம் முதல் மாணவர்களுக்கு சத்துணவில் வெஜிடபிள் பிரியாணி வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
பள்ளிகள் இடையேயான விளையாட்டு போட்டி
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பாவை வித்யாஸ்ரம் பள்ளியில், மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி, மூன்று நாள்கள் நடந்தன. முதல் நாள் போட்டியை, ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு துவக்கி வைத்தார்.
உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு: ஆசிரியர் சங்கம் பாராட்டு
உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வை, ஒளிவு, மறைவின்றி நடத்தி, அவரவர்களின் சொந்த மாவட்டங்களில் பணி நியமனம் வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு, உடற்கல்வி ஆசிரியர், சங்கம், நன்றி தெரிவித்துள்ளது.
Dir. of School Education : Common Syllabus for III Term for Classes I to VIII
COMMON SYLLABUS
III TERM
CLASSES I to VIII
Subject | ||
English | ||
Tamil | ||
Mathematics | English Version | Tamil Version |
Science III to VIII & EVS for I &II | English Version | Tamil Version |
Social Science (Classes III to VIII) | English Version | Tamil Version |
Sunday, November 25, 2012
"இரட்டைப் பட்டம்" பட்டங்களால் பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் பிரச்னை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு
டபுள் டிகிரி' பட்டங்களால் பதவி உயர்வு மற்றும்பணி நியமனம் பிரச்னை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டு சென்னை ஐகோர்ட்டில்நாளை (26 ம் தேதி)விசாரணை நடத்தப்படுகிறது.தமிழகத்தில் ஏதாவது பட்டப்படிப்பு படித்திருந்தால்ஒரு ஆண்டில் கூடுதல் பட்டப் படிப்பு (டபுள்டிகிரி) படிக்கும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல்,ஏதாவது முதுகலை பட்டம் படித்திருந்தாலும் ஒரு ஆண்டில் கூடுதல்
பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை கோரி வழக்கு
பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. உசிலம்பட்டி அருகே, கவுண்டம்பட்டி சூரியகாந்தியம்மாள் தாக்கல் செய்த மனு: நான், உசிலம்பட்டி அருகே திசுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை. மதுரை,
மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: முதலமைச்சர் வழங்கினார்
பள்ளி மாணவ, மாணவியருக்கு, சிறப்பு ஊக்கத் தொகை, நிரந்தர வைப்பு நிதி, ஸ்மார்ட் கார்டு ஆகிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைத்தார். 2011-12ம் கல்வியாண்டில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற, 4.60 லட்சம் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.
அரையாண்டு தேர்வு குளறுபடி : தேர்ச்சி விகிதம் குறையுமா?
அரையாண்டு தேர்வு கால அட்டவணை குளறுபடியால், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு,செய்முறை தேர்வு நடத்துவதில், தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, பட்டதாரி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் எனவும் அஞ்சப்படுகிறது.
பள்ளி கல்வித்துறையின் விஷன் 2024: அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகள் என, ஒட்டுமொத்தமாக, 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 1.35
உடற்கல்வி ஆசிரியர் 1,000 பேர் நியமனம்
பள்ளிக்கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
Friday, November 23, 2012
அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர் - தினகரன் செய்தி
கடந்த செப்டம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமன ஆணையில் TET தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என எந்த வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
ஏன் இந்தப் பாகுபாடு? ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த கட்டுரை
ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் எந்த ஒரு போட்டித் தேர்விற்கும் சாதி வாரியாக அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்குவது வழக்கம். மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் சலுகையானது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது என்று குரல் எழுப்பியுள்ளனர் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள்.
ஆண்டு இறுதிக்குள் 24 ஆயிரம் பேர் பணி நியமனம்: நட்ராஜ்
இந்தாண்டு இறுதிக்குள், 24 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறினார். சென்னை பல்கலைக்கழக, மேலாண்மை கல்வி துறை சார்பில், "மனித வள மேலாண்மை தற்போதைய முன்னேற்றம்" குறித்த கருத்தரங்கம், மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டலில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நட்ராஜ் பேசியதாவது:
பள்ளி நிர்வாகக் குழுவுக்கு பயிற்சியளிக்கும் கருத்தாளர்களுக்கு பயிற்சி
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நடைபெறவுள்ள 3 நாள் பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளிக்கவுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிற்சி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. பயிற்சியில் ராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வள மையத்திற்குட்பட்ட 45 ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் 45 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Thursday, November 22, 2012
கலை-அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்!
மாநில திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 20 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு, மென் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புத் திறன்கள் தொடர்பாக பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டாய தமிழ் பயிலும் சட்டம் - புதுச்சேரிக்கு விலக்கு
கட்டாயமாக தமிழ் பயிலும் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து, புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளில், இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், தேர்வு நடத்தவும், தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524 பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு துவக்கம்
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், 6,524 பேரை, இணையதள வழியில் பணி நியமனம் செய்யும் கலந்தாய்வு, நேற்று(நவம்பர் 21) துவங்கியது. கல்வித்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, 2 சதவீத பணி வாய்ப்பு வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நெல்லையில் பேரணி
ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாளையில் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது. 6வது ஊதிய குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின்படி ஆசிரியர்களை
இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்க்கால கூட்ட தொடரில் புதிய ஓய்வூதிய மசோதா CPS (PFRDA BILL - 2011) முன் வைக்கப்பட உள்ளது.
20 நாட்கள் நடக்க இருக்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011(PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY BILL 2011) நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற முன் வைக்கப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு
அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்குப்பின் விடுமுறை அளிக்கும் திட்டம்: அதிகாரி தகவல்
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10, 12-வது வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வில் மொழிப்பாட தேர்வுக்கு பின் விடுமுறை அளிக்கவும், அதையடுத்து மற்ற பாடங்களின் தேர்வுகளை நடத்தும் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.பகவதி தகவல் தெரிவித்தார்.
Wednesday, November 21, 2012
D.TEd பட்டைய படிப்பு +2 கல்வித் தகுதிக்கு இணையானது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
D.TEd பட்டைய படிப்பு பனிரெண்டாம் வகுப்புக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது. இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியான D.TEd பட்டைய படிப்பானது +2 படிப்புக்கு இணையாகவே கருதப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
ஆசிரியர் பணி நியமனத்திற்கான பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் - ஆசிரியர் தேர்வு வாரியம்
டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இறுதி தேர்வுப் பட்டியலில், இடம்பெறும், 22 ஆயிரம் பேருக்கு, விரைவில் வேலை வழங்கப்பட உள்ளது. டி.இ.டி.,தேர்வு அடிப் படையில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர், 25 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவர் என, டி.ஆர்.பி., அறிவித்தது.
கல்வித்துறை சார்ந்த அமைச்சுப்பணியாளர்கள் ஆசிரியர்கள் ஆவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு இணையதள மூலம் நடத்த உத்தரவு.
முதுகலையுடன் பி.எட்., முடித்த கல்வித்துறை பணியாளர்களை, ஆசிரியர்களாக நியமிக்கும் "ஆன் லைன் கவுன்சிலிங்" நவம்பர் 21ல் நடக்கிறது. பட்டதாரி, முதுகலை பி.எட்., முடித்து, கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு, சர்வீஸ் அடிப்படையில் 2 சதவீதம் பேர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் அரசு உத்தரவு 6 மாதத்திற்கு முன்பு அமலானது. இதன்மூலம் ஓய்வு பெற 5, 7 ஆண்டுகளே உள்ள நிலையில், சிலருக்கு பள்ளியில் பாடமெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) - தகுதிதான் அடிப்படை! - தினமணி கட்டுரை
ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Tuesday, November 20, 2012
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் சி.சண்முகம் பதவி உயர்வு பெற்று,
குரூப்4 தேர்வு கவுன்சலிங் முடித்தோருக்கு 7 நாட்களுக்குள் பணி நியமன ஆணை
குரூப் 4 தேர்வு கவுன்சலிங்கில் பங்கேற்றவர்களுக்கு 7 நாட்களுக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வில் அடங்கிய இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர் உள்ளிட்ட 10,718 காலிப்பணி இடத்தை நிரப்ப ஜூலை 7ம் தேதி எழுத்து தேர்வை நடத்தியது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: ஒரு வாரத்துக்குள் இறுதி தேர்வுப் பட்டியல்
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: பள்ளி கல்வி இயக்குனர்
பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைக்க பள்ளிகல்வி இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர். மாணவ - மாணவிகள் தங்களின் குறை / நிறைகளையும் மற்றும் அவர்களுக்கு பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகளையும் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
230 மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த 260 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு.
மாநிலத்தில், 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, 260 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என, பள்ளிக்கல்வி செயலர் சபிதா அறிவித்துள்ளார்.
Monday, November 12, 2012
தடங்கலுக்கு வருந்துகிறோம்
சிறிய விபத்தின் காரணமாக என்னால் நமது வலைப்பூவை புதுபிக்க இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். விரைவில் மீண்டும் பழைய படி நமது வலைப்பூவில் அனைத்து வித செயல் பாடுகளும் வழக்கம் போல் புதுபிக்கும் பணி நடைபெறும் என்பதை தெரிவித்துகொள்கிறோம் - www.tnkalvi.com
Wednesday, November 7, 2012
Monday, November 5, 2012
ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க சிறப்பு முகாம்
ஆசிரியர்களின் ஊதியம், தேர்வு நிலை, பதவி உயர்வு உள்ளிட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க, சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
குரூப்-2 மறுதேர்வு: 48 சதவீதம் பேர் ஆப்சென்ட்
தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதால், ரத்து செய்யப்பட்ட, குரூப் - 2 தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்காக, மொத்தம், 6.5 லட்சம்பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.73 லட்சம் பேர் பங்கேற்கவில்லை.
குரூப் 2 தேர்வு: ஒன்றரை மாதத்தில் முடிவு
குரூப் 2 தேர்வு முடிவுகள் ஒன்றரை மாதத்தில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஆர்.நடராஜ் தெரிவித்தார். குரூப் 2 பிரிவில் நகராட்சி ஆணையாளர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் என 3 ஆயிரத்து 687 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.
Sunday, November 4, 2012
ஆசிரியர் தகுதி மறுத்தேர்வு மதிப்பெண் குறைப்பிற்கு வாய்ப்பு கிடையாது, அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் அல்லது ஜுனில் நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
டி.இ.டி., மறுதேர்வு முடிவு, வெளியிடப்பட்ட நிலையில், தகுதி மதிப்பெண் குறைப்பிற்கு வாய்ப்பு கிடையாது" என, துறை வட்டாரங்கள், உறுதியாக தெரிவித்தன. அடுத்த டி.இ.டி., தேர்வு, ஏப்ரல் அல்லது ஜூனில் நடக்கும் எனவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆசிரியர்களின் ஆலோசனைகள்
கவனக்குறைவை தவிர்த்தால், நூறு மதிப்பெண்கள் பெறுவது எளிதானது என தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் கால அவகாசம் நீட்டிப்பு
மத்திய அரசு 2009ம் கொண்டு வந்த ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை, அமல்படுத்துவதற்கான அவகாசம், மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Saturday, November 3, 2012
Friday, November 2, 2012
ஆசிரியர் தகுதி மறுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முழு விவரம் இன்று இரவு வெளியிட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் தகுதிதேர்வில் - 10394 பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் - 8849 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி வருகிற நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதி மறுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் இன்று இரவு 11 மணியளவில் வெளியிட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் தகுதிதேர்வில் - 10394 பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் - 8849 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி வருகிற நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம்
அரசு தேர்வுகள் இயக்ககம் - 10 / 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு காலஅட்டவணை வெளியீடு
(10.00AM TO 12.45PM)
டிசம்பர் 19 - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 20 - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 21 - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 22 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 21 - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 22 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜனவரி 02 - கணக்கு
ஜனவரி 04 - அறிவியல்
ஜனவரி 07 - சமூக அறிவியல்
19.12.2012 - PART-I LANGUAGE PAPER - I
20.12.2012 - PART-II LANGUAGE PAPER - II
21.12.2012 - PART-II ENGLISH PAPER - I
22.12.2012 - PART-II ENGLISH PAPER - II
ஜனவரி 04 - அறிவியல்
ஜனவரி 07 - சமூக அறிவியல்
19.12.2012 - PART-I LANGUAGE PAPER - I
20.12.2012 - PART-II LANGUAGE PAPER - II
21.12.2012 - PART-II ENGLISH PAPER - I
22.12.2012 - PART-II ENGLISH PAPER - II
அரசு தேர்வுகள் இயக்ககம் - 10 / 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு காலஅட்டவணை வெளியீடு
பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை
டிசம்பர் 19 - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 20 - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 21 - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 22 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 21 - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 22 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜனவரி 02 - கணக்கு
ஜனவரி 04 - அறிவியல்
ஜனவரி 07 - சமூக அறிவியல்
HIGHER SECONDARY HALF YEARLY EXAMINATION 2012 - 2013 (10.00AM TO 1.15PM)
ஜனவரி 04 - அறிவியல்
ஜனவரி 07 - சமூக அறிவியல்
HIGHER SECONDARY HALF YEARLY EXAMINATION 2012 - 2013 (10.00AM TO 1.15PM)
பேருந்தில் தொங்கியபடி பயணம்: 8ம் வகுப்பு மாணவன் பலி - DINAMALAR NEWS
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி, பயணம் செய்த பள்ளி மாணவன், கை வழுக்கி கீழே விழுந்து இறந்தார். இதுபோன்ற சம்பங்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமை இன்றி தள்ளாடும் ஆதிதிராவிட நலப் பள்ளிகள்
தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறது.
Thursday, November 1, 2012
கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி / கல்லூரி களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில்
இன்று கன மழை பெய்து வரும் நிலையில், அம்மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலம் புயல் காரணமாக கடந்த இரண்டு
நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு
மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை: மத்திய அரசு
மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது. ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதாகவும், சீருடைகள், புத்தகங்கள் அனைத்தும் வெளியில் தான் வாங்க வேண்டும் என்ற விதிமுறைகளை விதிக்கின்றனர் ஆசிரியர்கள்.
அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.5000 /- ஆக உயர்த்தியும், 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணியினை முடித்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகை ரூ.2000/- ஆக உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு
தமிழ்நாடு சட்டபேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பண்டிகை முன்பணம் உயர்த்தி ஆணை பதிவிறக்கம் செய்ய...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று முதல்வர் அவர்கள் அறிவித்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அதன் பொது செயலாளர் அவர்களின் கடிதம்
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு 5 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணியக்கப்பட்ட 2000 ரூபாய் பண்டிகை முன் பணத்தை 5000 ரூபாயாக உயர்த்தியும், 25 ஆண்டு காலம் அப்பழுக்கற்ற பணியினை முடித்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை 15 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட்து என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த தொகையினை 500
இடைநிலை ஆசிரியர் தகுதி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு சீனியாரிட்டி சரிப்பார்ப்பு
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி நேற்று சரி பார்க்கப்பட்டன. தமிழகத்தில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றோர் முதல் தாளையும், பி.எட் ஆசிரிய பயிற்சி முடித்தோர் இரண்டாம் தாள் தேர்வையும்
BULK எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை மற்றும் கட்டுபாடுகள் விதிக்க மத்திய அரசு திட்டம்!
மொத்தமாக, அதிக எண்ணிக்கையில், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., செய்திகளை அனுப்புவதை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதில், யார் யாருக்கு விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து, முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.வதந்தி, தீ போல பரவக் கூடியது. ஒருவர், பத்து ரூபாயைத் திருடி விட்டாராம் என பரப்பப்படும் வதந்தி, பத்தாவது நபரைச்
ஆசிரியர் பணி நியமனம்: மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை
உடற்பயிற்சி, ஓவிய ஆசிரியர் பணி நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான, 3 சதவீத இடஒதுக்கீடு, பின்பற்றப்படாததால், ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்
மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி என்ற தலைப்பில், 10 கட்டளைகள் விளக்கம் தரப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)