Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 2, 2012

    பேருந்தில் தொங்கியபடி பயணம்: 8ம் வகுப்பு மாணவன் பலி - DINAMALAR NEWS

    தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி, பயணம் செய்த பள்ளி மாணவன், கை வழுக்கி கீழே விழுந்து இறந்தார். இதுபோன்ற சம்பங்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குச்சனூரில் இருந்து, தேனி நோக்கி புறப்பட்ட அரசு பஸ், 8.30 மணிக்கு முத்துதேவன்பட்டிக்கு நேற்று காலை வந்தது. பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் தினேஷ், (வயது 13) இந்த பேருந்தில் ஏறினார். இவர், பழனிசெட்டிபட்டியில் உள்ள பழனியப்பா மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

    பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவன் தினேஷ், முன்பக்க படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்தார்.  பழனிசெட்டிபட்டி "வாட்டர் டேங்க்&' அருகே பேருந்து வந்த போது, தினேஷ் கை வழுக்கியது. தவறி கீழே விழுந்த தினேஷ் தலையில், பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி, தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார், டிரைவர் வடிவேலுவிடம் விசாரணை நடத்தினர்.

    பள்ளி மாணவர்கள், அரசுப் பேருந்துகளில் தொங்கியபடி படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சமூக ஆர்வலர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments: