Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 2, 2012

    தலைமை இன்றி தள்ளாடும் ஆதிதிராவிட நலப் பள்ளிகள்

    தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறது.
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,095 பள்ளிகள், செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 1.50 லட்சம் மாணவர்கள், பயின்று வருகின்றனர். இதில், நூற்றுக்கும் குறைவான மேல்நிலைப் பள்ளிகளே செயல்படுகிறது. இம்மேல்நிலைப் பள்ளிகளில், 24 தலைமை ஆசிரியர்கள், 97 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், இங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரம், குறையும் அபாயத்தில் உள்ளது.

    இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில், பெரும்பான்மையான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில், பல ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள பணியிடங்களில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், கவுரவ ஆசிரியர்களை நியமித்திருந்திருக்கலாம். அதுகுறித்தும், எந்த அக்கறையும் காட்டவில்லை. இதனால், நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த, மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து கொண்டே வருகிறது.

    நிதிநிலை அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளியில் பயிலும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசு அறிவித்திருக்கிறது, ஆண்டு கணக்கில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை. இதேநிலை தொடர்ந்தால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பயிலும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை, கல்வி பிரிவு உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, "காலி பணியிடங்களில், ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு பின், காலி பணியிடங்களை நிரப்பி விடுவோம்&' என்றனர்.

    1 comment:

    Speak with Siva said...

    which deepavali? This year or next?