Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 5, 2012

    குரூப்-2 மறுதேர்வு: 48 சதவீதம் பேர் ஆப்சென்ட்

    தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானதால், ரத்து செய்யப்பட்ட, குரூப் - 2 தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்காக, மொத்தம், 6.5 லட்சம்பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.73 லட்சம் பேர் பங்கேற்கவில்லை.
    கடந்த முறை தேர்வை நன்றாக எழுதியிருந்தும், வினாத்தாள் வெளியானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட விரக்தி காரணமாக, நேற்றைய தேர்வை பெரும்பாலானோர் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

    நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, சார் பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உட்பட பல்வேறு பதவிகளில், காலியாக உள்ள, 3,687 பணியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 12ம் தேதி, குரூப்-2 தேர்வு நடந்தது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்திய, இந்த தேர்வை, தமிழகம் முழுவதும், 6.5 லட்சம் பேர் எழுதினர்.தேர்வு நடந்த அன்றே, வினாத்தாள், ஈரோட்டில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு, நேற்று நடத்தப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.

    அதன்படி, தமிழகம் முழுவதும், குரூப்-2 மறுதேர்வு,நேற்று நடந்தது.காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, குரூப்-2 தேர்வும், பிற்பகல், 2:30 மணி முதல் 5:30 மணி வரை, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை செயல் அலுவலர் பணிக்கான, சைவம், வைணவம் பாடத் தேர்வும், மாநிலம் முழுவதும், 3,456 தேர்வுக் கூடங்களில் நடந்தது.

    தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க, தேர்வு மையங்கள், வீடியோ காமிரா, வெப் கேமிரா  மூலம் கண்காணிக்கப்பட்டது. பிரச்னைக்குரிய மையங்களில், வெப் கேமிரா பொருத்தப்பட்டு, தேர்வு எழுதியவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தேர்வில், குறைந்த எண்ணிக்கையிலேயே விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். சென்னையில் பெரும்பாலான தேர்வு கூடங்கள், வெறிச்சோடி காணப்பட்டன.

    மற்ற மாவட்டங்களிலும், இதே நிலை காணப்பட்டது. மாநிலம் முழுவதும் நடந்த மறுதேர்வில், 41.62 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை என,டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வுக்கு விண்ணப்பித்த, 6.5 லட்சம் பேரில், 2.73 லட்சம்பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. சென்னையில், 48 சதவீதம் பேர், தேர்வை புறக்கணித்தனர். குரூப்-2 தேர்வில்,  2.73 லட்சம் பேர் பங்கேற்காமல் புறக்கணித்தது, தேர்வாணைய அதிகாரிகளிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து, ஆகஸ்ட் மாதம் நடந்த, குரூப்-2 தேர்வு எழுதியவர்களிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது: ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வுக்காக, கடினமாக படித்து தேர்வு எழுதினோம். யாரோ சிலர் செய்த தவறால், வினாத்தாள் வெளியானது. இதற்காக,தேர்வு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஒருமுறை, படித்து தேர்வை எதிர்கொள்வதற்கு, மனதளவில் நாங்கள் தயாராகவில்லை.

    அதனால் ஏற்பட்ட விரக்தியால், தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தும், பங்கேற்காமல் புறக்கணித்தோம். இனிமேலாவது, இதுபோன்ற தவறுகளுக்கு இடமளிக்காமல், ஆணையம் செயல்பட வேண்டும். அப்போதுதான்,  இளைஞர்கள் ஆர்வத்தோடு தேர்வில் பங்கேற்பர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்றைய தேர்வில் பங்கேற்றவர்கள், பொது தமிழ் கேள்விகள் எளிதாகவும், பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

    No comments: