Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, November 22, 2012

    ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய நெல்லையில் பேரணி

    ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாளையில் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது. 6வது ஊதிய குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின்படி ஆசிரியர்களை
    நியமனம் செய்ய வேண்டும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக் காலத்தை கணக்கிட்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும்.

    இடைநிலை, பட்டதாரி, கைத்தொழில் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

    இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (22ம் தேதி) பேரணி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பாளை லூர்துநாதன் சிலை முன்பு இன்று (22ம் தேதி) மாலை 5 மணிக்கு பேரணி ஆரம்பமாகி பாளை மார்கெட் திடலில் முடிவடைகிறது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் பிராங்களின் வரவேற்கிறார்.

    அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு உறுப்பினர் ரமாதேவி பார்வையாளராக பங்கேற்கிறார். இதில் தமிழ்நாடு தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநில தலைவர் பாண்டியன், மாநில துணை செயலாளர் தாயப்பன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஜான் துரைசாமி, முத்துராமன், மனோகரன், பிரபு கட்டாரி, சந்திரன், முத்தம்மாள், மெர்சி நிர்மலா சாமுவேல், மோதிலால் ராஜ், மருது, ராமர், கிறிஸ்டோபர், இனிகோ, பாபு உட்பட பலர் பேசுகின்றனர்.மாவட்ட பொருளாளர் சிவஞானம் நன்றி கூறுகிறார்.

    1 comment:

    Anonymous said...

    amam da neenga ukandha idathula irundhutu seat a theaikanum padikaravanga elam ilavu kaatha kili madhiri emaranum.. nalla iruku nyayam. seniority seniority nu uyira vidarengale???? thagudhi thervu ezudha vendiadhydane neengalum?? experience iruku illa?? pass panirukalam ila?? 6-10 subject dane?? asingama illa? chee