Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, November 2, 2012

    தமிழக பள்ளிகளில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த சத்துணவுகளில் புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு.

    தமிழ்நாடு சட்டபேரவை விதி 110ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களின் அறிக்கை பதிவிறக்கம் செய்ய...

    பள்ளி குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகள்: முதல்வர்
    பள்ளிகளில் செயல்படும் சத்துணவு திட்டத்தில், பல புதிய உணவுகளை, குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப வழங்குவதற்கு, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக, சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: சோதனை முறையின் அடிப்படையில், புதிய உணவு வகைகளை சத்துணவு திட்டத்தில் படிப்படியாக அறிமுகம் செய்ய எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.

    இதன்படி, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில்,

    திங்கட்கிழமை - காய்கறி பிரியாணி மற்றும் மிளகுத்தூள் முட்டை

    செவ்வாய்க்கிழமை - கொண்டைக்கடலை புலவு மற்றும் தக்காளி முட்டை மசாலா

    புதன்கிழமை - தக்காளி சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை

    வியாழக்கிழமை - சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டை

    வெள்ளிக்கிழமை - கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், முட்டை மசாலா மற்றும் மிளகாய்ப் பொடியில் வறுத்த உருளைக்கிழங்கு.


    மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வாரங்களில்,

    திங்கட்கிழமை - சாம்பார் சாதம் மற்றும் வெங்காயம், தக்காளி முட்டை மசாலா.

    செவ்வாய்க்கிழமை - மீல் மேக்கர், காய்கறி கலவை சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை

    புதன்கிழமை - புளியோதரை மற்றும் தக்காளி முட்டை மசாலா

    வியாழக்கிழமை - எலுமிச்சை சாதம், தக்காளி முட்டை மசாலா மற்றும் சுண்டல்

    வெள்ளிக்கிழமை - சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொறியல்.

    ஆகிய அட்டவணைகளில் உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதேபோன்று, அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளின் சிறப்பம்சம் மற்றும் செரிமானத் திறன் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படும். புதிய திட்டத்தின்படி,

    திங்கட்கிழமை - தக்காளி சாதம், வேகவைத்த முட்டை

    செவ்வாய்க்கிழமை - கலவை சாதம் மற்றும் சுண்டல்

    புதன்கிழமை - காய்கறி புலவு சாதம் மற்றும் வேகவைத்த முட்டை

    வியாழக்கிழமை - எலுமிச்சை சாதம் மற்றும் வேகவைத்த முட்டை

    வெள்ளிக்கிழமை - பருப்பு சாதம், வேகவைத்த உருளைக்கிழங்கு

    சனி மற்றும் ஞாயிறு - கலவை சாதம்.

    மேற்கூறிய புதிய உணவுவகைத் திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், முதலில் ஒரு வட்டாரத்தில் மட்டும் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த வட்டாரத்தில், இந்த புதிய உணவுமுறை திட்டத்தின் செயல்பாடு குறித்து அறிந்த பின்னர், மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


    No comments: