மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது. ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதாகவும், சீருடைகள், புத்தகங்கள் அனைத்தும் வெளியில் தான் வாங்க வேண்டும் என்ற விதிமுறைகளை விதிக்கின்றனர் ஆசிரியர்கள்.
இதுமட்டுமின்றி தகுதிவாய்ந்த தேர்வுகள் எழுதுவதற்கு தடை விதிக்கக் கூடாது. குறைவான மதிப்பெண் பெற்றதற்காக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கக்கூடாது. பள்ளிக்கூட பருவங்களின் இடையில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு காரணம் காட்டி பள்ளிகளிலிருந்து நீக்க தடை விதிக்கக் கூடாது.
எனவே மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்ற வரைவு மசோதா இன்று டில்லியில் நடக்கவுள்ள மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில் முன்வைக்க உள்ளது.
No comments:
Post a Comment