Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, October 28, 2014

    அரசு உத்தரவு வராததால் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலணி தேக்கம்

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணி வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இலவச காலணிகள் வழங்க தயாராக இருந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    இதனால், காலணி விநியோகம் குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின்பும் இதுகுறித்து எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை.
    தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், உதவி தொடக்க கல்வி அலுவலங்களில் வைக்கப்பட்டுள்ள காலணிகள் சேதமடைய தொடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஆயிரத்து 119 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு வழங்க வேண்டிய காலணிகள் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அரசு உத்தரவு இல்லாததால் விநியோகம் செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments: