Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, October 28, 2014

    அரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல்: புது நடைமுறையால் திணறல்

    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ''ஊழியர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்காத நிலையில் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அந்தந்த அலுவலகங்களில் சம்பளப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது இந்த நடைமுறை எளிதாக்கப்பட உள்ளது. 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் அந்தந்த அலுவலகங்களில் இருந்து நேரடியாக வங்கிக்கே பட்டியல் அனுப்பப்படும். தற்போது இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் கூறியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 'வெப் பே-ரோல்' முறையில் சம்பளம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையில் வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண் துறை அலுவலர்களுக்கு சோதனை அடிப்படையில் கடந்த மாதம் சம்பளம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறை அலுவலகத்திலும் ஊழியர் ஒருவருக்கு இந்த நடைமுறை குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். 'கடமைக்காக' கூட்டம் போட்டு இது தான் 'வெப் பே-ரோல்' என வாய்மொழியாக கூறிவிட்டனர்; கம்ப்யூட்டரில் பயிற்சி அளிக்கவில்லை.

    இதனால் உழியர்கள் தடுமாறுகின்றனர். துறை அலுவலர்களின் பணிமூப்பு விபரங்களை பதிவு செய்யவே நாட்கள் குறைவாக உள்ளது; இந்நிலையில், இம்மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த முறையிலே சம்பளம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல உதவியாளர்களுக்கு இதற்கான 'யூசர் நேம், பாஸ்வேர்டு' ஆகியவற்றை கருவூலத்துறையினர் கொடுக்கவில்லை. இதனால் அக்டோபர் மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. இவ்வாறு கூறினார்.

    No comments: