அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வள மையத்தில் தொடக்க நிலை வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கணித அடிப்படை திறன்கள் வளர்த்தல் மற்றும் கணித உபகரண பெட்டி பயன்படுத்துதல் பற்றிய பயிற்சி நடந்தது.
கணித அடிப்படை செயல்களை எளிய முறையில் கற்பித்தல், உபகரணப் பெட்டியை பயன்படுத்தி கணிதம் கற்பித்தல் பற்றி விளக்கப்பட்டது. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பால்ராஜ், உதவி திட்ட இயக்குநர் ராஜாராம் ஆலோசனை வழங்கினர். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சாந்தி செய்தார்.
No comments:
Post a Comment