Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, October 22, 2014

    "நுாலகங்களை நண்பனாக்கி கொள்ள வேண்டும்; அவைதான் அறிவின் கருவூலங்கள்"

    நுாலகங்கள்தான் அறிவின் கருவூலங்கள் என, அண்ணாமலை பல்கலையின் நுாலக அறிவியல் துறை தலைவர் நாகராஜன் பேசினார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து, சென்னை, பாரதி அரசு மகளிர் கல்லுாரியின் பொது நுாலகத் துறை, ஆராய்ச்சி படிப்பில், நுாலக தகவல் தொழில்நுட்ப துறையின் பங்கு என்ற கருத்தரங்கை நடத்தியது.


    அதில் பங்கேற்ற, அண்ணாமலை பல்கலையின் நுாலக அறிவியல் துறை தலைவர் நாகராஜன் பேசியதாவது: ஆராய்ச்சி மாணவர்களும், ஆசிரியர்களும் நிறைய புத்தகங்களை வாங்க வேண்டி உள்ளது. ஆனால், தொழில்நுட்ப புரட்சி, தகவல்களின் தொடர் முன்னேற்றம் போன்ற காரணங்களால், ஒரு தனி மனிதனால் அனைத்து புத்தகங்களையும் சேகரிக்க முடியாது.

    அந்த குறையை போக்குவதுதான் நுாலகங்கள். தகுதியான நபருக்கு, தகுதியான புத்தகங்களை, தகுந்த நேரத்தில் வழங்க வல்லவையே சிறந்த நுாலகங்கள். அவை, கலாசாரம், அரசியல், அறிவியல், கல்வி, கலைகளின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிப்பவை. அதனால், மாணவர்களும், ஆசிரியர்களும், நுாலகங்களை, நண்பனாக்கி கொள்ள வேண்டும். காரணம், அவைதான் அறிவின் கருவூலங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    No comments: