Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, October 24, 2014

    ஆசிரியர் பற்றாக்குறையால் சரிந்தது மாணவர் சேர்க்கை

    அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்தது.


    கொத்தபுரிநத்தம், அரசு நடுநிலைப் பள்ளியில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பணியாற்றிய ஆசிரியர்கள், கடந்த 4 மாதங்களுக்கு முன் பதவி உயர்வு மற்றும் இடமாற்றத்தில் சென்று விட்டனர். இதனால், காலியான பணியிடங்களுக்கு ஆசிரியர் நியமிக்கப்படாமல், ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து வருவதால், எல்.கே.ஜி., வகுப்பில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது. எனவே மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    No comments: