Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 24, 2014

    சென்னை பல்கலையின் ஆசிரியர் தேர்வில் முறைகேடு: ஆட்சிமன்ற குழுவில் கடும் ஆட்சேபம்


    சென்னை பல்கலை யின் ஆசிரியர்களை தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, ஆட்சி மன்ற குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.சென்னை பல்கலை யின், ஆட்சி மன்ற குழு (சிண்டிகேட்) கூட்டம், துணைவேந்தர் தாண்ட வன் தலைமையில் நடந்தது. 

    இதில், உயர்கல்வித் துறை செயலர் ஹேமந்த் குமார் சின்கா, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் பிரவீன்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற னர். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சிலர் கூறியதாவது: சென்னை பல்கலைக்கு, நானோ தொழில்நுட்பவியல், நானோ அறிவியல், உயிர் அறிவியல் உள்ளிட்ட துறைகளுக்காக, இரண்டு கட்டமாக ஆசிரியர்களை தேர்வு செய்தனர். அதில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன; அதை பற்றி விசாரிக்க வேண்டும் என, உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

    மேலும், கடந்த ஆட்சி மன்ற குழு கூட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கமிஷனர் பிரவீன் குமார், தான் பேசியதை அவைக்குறிப்பில் சேர்க்காமல், தான் பேசாத தகவல்களை சேர்த்து, சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி, எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர், கல்வி தகுதி மதிப்பீட்டின் அடிப்படையில், தர நிர்ணய கட்டுப்பாட்டு மையத்தின் ஒப்புதலோடும்,தொடர்புடைய குழுக்களின் ஒப்புதலோடும் தான், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என, தெரிவித் தார். உயர்கல்வி துறையின் கூடுதல் தலைமை செயலர், ஹேமந்த் குமார் சின்கா உள்ளிட்டோரும் இதையே வலியுறுத்தினர். அதை தொடர்ந்து, வரும் கூட்டங்களில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நியாயமான பதில்களை, தொடர்புடையோர் அளிப்பர் என, நம்புகி றோம். மேலும், அவ்வாறு நியாயம் கிடைக்க வேண்டும் எனில், உயர்கல்வி துறை கூடுதல் செயலரும், தொழில்நுட்ப கல்வி கமிஷனரும், தொடர்ந்து கூட்டங்களுக்கு வரவேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    No comments: