Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 25, 2014

    மத்திய அரசு ஊழியர்கள் குழப்பம்; கிறிஸ்துமஸ் லீவு உண்டா? இல்லையா?

    நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வேலைக்கு வரும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
    இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் துரைபாண்டியன் கூறியதாவது: ஆண்டு தோறும் வழங்கப்படும் 17 நாள் விடுப்பில், 14 நாட்கள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுபவை. மீதி உள்ள 3 நாட்கள் அந்தந்த மாநிலங்களில் பண்டிகை நாட்களை பொறுத்து அறிவிக்கப்படும். இது போன்று நடைமுறை உள்ள நிலையில், டிசம்பர் 25ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் வருகிறது. அதனை கொண்டாடும் வகையில், மத்திய அரசு பள்ளிகளான நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறவில்லை. விருப்பமுள்ளவர்கள் வரலாம் என அறிவிக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, மத்திய அரசு ஊழியர்கள் கிறிஸ்துமஸ் அன்று பணிக்கு வர வேண்டும் என உத்தரவு நகலாக இல்லாமல், சர்க்குலராக இளைஞர்நலன், கல்வி, நகர்புற அமைச்சகங்களில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி எங்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை. அப்படி பணிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டால், நாங்கள் யாரும் வர மாட்டோம். இதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

    No comments: