Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 28, 2014

    பள்ளி மாணவன் மரணத்தில் சந்தேகம்: உடலை பாதுகாப்பாக வைக்க உத்தரவு

    பள்ளி மாணவனின் உடலை, பாதுகாப்பாக வைக்கும்படி, திருச்சி, அரசு மருத்துவமனை கல்லூரியின் டீனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவைச் சேர்ந்த, ராமநாதன் என்பவர், தாக்கல் செய்த மனு: என் மகன் ராம்குமார், பெரம்பலூரில் உள்ள, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 22ம் தேதி, அவன் மரணமடைந்து விட்டதாக, எங்களுக்கு தகவல் வந்தது. தற்கொலை செய்து கொண்டதாக, போலீசில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், என் மகன் கொலை செய்யப்பட்டுள்ளான். இதுகுறித்து, பெரம்பலூர் போலீசில், புகார் கொடுத்தேன். பள்ளி அதிகாரிகள், ஆசிரியருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கவில்லை. அவசரகதியில், எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். உள்ளூர் போலீசார் மீது, எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
    மனுவை, நீதிபதி கல்யாணசுந்தரம், நேற்று விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.பாலு, அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 29ம் தேதிக்கு, நீதிபதி கல்யாண சுந்தரம், தள்ளிவைத்தார். இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, உடலை பாதுகாப்பாக வைக்கும்படி, திருச்சி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீனுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்

    No comments: