Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 31, 2014

    கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

    சென்னையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன்போக்குவரத்து கழகத்தின் 11 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான
    முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
    இதனால், கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து இல்லாமல்

    அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
    ஊழியர்கள் ஸ்டிரைக் : சம்பள உயர்வு, நிரந்தர பணி நியமனம் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து கழக
    ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.

    அண்ணா தொழிற்சங்கம் நீங்களாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11
    தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தில்
    ஈடுபட்டு வந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலான
    பஸ்களே அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த
    தொழிலாளர்களைக் கொண்டு இயக்கப்பட்டு வந்ததன.
    போராட்டத்தை வாபஸ் பெறுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச்
    சேர்ந்த தலைவர்களும், மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    அமைச்சருடன் பேச்சு : போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்
    பாலாஜி தலைமையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய
    சிஐடியு சவுந்தரராஜன் பேசுகையில், ஊழியர்களின் சம்பள
    பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த
    குழு ஒன்று அமைக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.
    பேச்சுவார்த்தைக்கான முத்தரப்பு குழு ஓரிரு நாளில் அமைக்க
    நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்
    தெரிவித்துள்ளார்.மேலும் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில்
    சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டத்தை திரும்ப பெற
    தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. ஊழியர்கள் மீண்டும்
    வேலைக்கு திரும்பும் பணி இன்றும், நாளையும் நடைபெறும் என

    தெரிவித்துள்ளார்.

    No comments: