Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 20, 2014

    தமிழக கல்வி திட்டங்களை பின்பற்றி நாடு முழுவதும், உயர்கல்வி சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தகவல்

     மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனை, செயலாற்றல் இவற்றின்மூலம் தமிழகத்தில் பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் மிகுந்த வளர்ச்சியடைந்து, மாணவ மாணவியரின் அறிவுத்திறன் பெருகியுள்ளதாகவும், இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்படுத்தவேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

    நாடாளுமன்ற மக்களவையில், நேற்று பேசிய சிதம்பரம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. மா. சந்திரகாசி, ஜெயங்கொண்டம் அனல்மின் நிலையத் திட்டத்திற்கு கடந்த 1998-ம் ஆண்டில் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வழங்கியதாகத் தெரிவித்தார். அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து, சத்தியமங்கலம் வரை நடைபெற்றுவரும் அகல ரயில்பாதை அமைப்புத் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று, நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் C. கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா, உயர்கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்துள்ளார் என்றும், இதனைப் பின்பற்றி நாடு முழுவதும் உயர்கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்றும் அரக்கோணம் தொகுதி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு.திருத்தணி கோ. அரி, மக்களவையில் வலியுறுத்தினார். முன்னதாக, நாடாளுமன்றம் கூடியதும், பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இரு அவைகளிலும், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    No comments: