Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 19, 2014

    பொதுத்தேர்வு நெருங்குவதால் ஆசிரியர் பணியிடமாற்றங்கள் நிறுத்தம்: அரசு உத்தரவு

    பொதுத்தேர்வு நெருங்குவதால் நடப்பு கல்வியாண்டில் இனி ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று பள்ளி கல்வி செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் கலந்தாய்வு நடந்து முடிந்த பின்னரும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
    இந்தநிலையில் நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களை இனி மேற்கொள்ள வேண்டாம் என்றும், அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வி செயலாளர் சபிதா பள்ளி கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:
    ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டில் பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கி வருவதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களை மேற்கொண்டால் தொடர்ச்சியான கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படும். மாணவர்களின் கற்கும் திறனும் பாதிக்கப்படும். நிர்வாகத்திலும் இது இடர்பாடுகளை ஏற்படுத்தும். எனவே இக்கல்வியாண்டு முடியும்வரை ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் ஏதும் மேற்கொள்ளக்கூடாது என்று அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 comments:

    Karthik said...

    அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் பணியிட மாற்றம் நடைபெற உள்ளது. இதற்கு இந்த அரசாணை பொருந்துமா?

    ஆரோக்கியராஜ் said...

    நவம்பர் மாதம் 300 பதவி உயர்வு .(அதன் பெயரில் 3000 மாறுதல் 500கோடி.டாக்டர் ராமதாஸ் அவர்கள் கூற்றுப்படி ).இப்ப மீண்டும் பதவி உயர்வு ? எத்தனை மாறுதல்களோ ? அம்மா அவர்கள் வீட்டில் இருக்கிறார் .அமைச்சர் அவர்கள் மருத்துவ சிகிச்சையில் .அதிகாரிகளுக்கு சனி பெயர்ச்சி கொண்டாட்டம் ..

    ஆரோக்கியராஜ் said...

    நவம்பர் மாதம் 300 பதவி உயர்வு .(அதன் பெயரில் 3000 மாறுதல் 500கோடி.டாக்டர் ராமதாஸ் அவர்கள் கூற்றுப்படி ).இப்ப மீண்டும் பதவி உயர்வு ? எத்தனை மாறுதல்களோ ? அம்மா அவர்கள் வீட்டில் இருக்கிறார் .அமைச்சர் அவர்கள் மருத்துவ சிகிச்சையில் .அதிகாரிகளுக்கு சனி பெயர்ச்சி கொண்டாட்டம் ..