விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மாணவியரிடம், தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி ஆசிரியர் இருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
மதுரபாக்கம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி, இடைநிலை ஆசிரியர், ராஜேந்திரன். பெருமூக்கல் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர், ஜான் பீட்டர்.இருவரும், அந்தந்த பள்ளிகளில் பயிலும் மாணவியரிடம், தவறாக நடந்து கொண்டதாக, மாணவியரின் பெற்றோர், இரு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தனர்.இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment