தேனி மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம் மற்றும் மாணவர்களின் தனித் திறனை ஊக்குவிப்பதற்கு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை அடிப்படையில் 60 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் 30 நடுநிலைப் பள்ளிகளில் வரும் பிப்ரவரி மாதம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. ஆண்டு விழா நடத்துவதற்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5,000, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment