Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 28, 2016

    மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்குமா?

    கனமழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


    கடலுார் மாவட்டத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக பண்ருட்டி பகுதியில் ஒரே இரவில் 40 செ.மீ., மழை கொட்டியதால் ஓடையில் வீடு கட்டியிருந்த 2 குடும்பத்திலும் தலா 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 80க்கும் மேல் தாண்டியது. 

    வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மாணவ, மாணவியர்கள் தங்கள் நோட்டு புத்தகங்களை இழந்தனர். முக்கிய பதிவேடுகள் பாழாகின. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இன்னமும் அதிலிருந்து மீள முடியாத மன நிலையில் உள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த உடன் பொதுத்தேர்வு செய்முறை தேர்வு தொடங்குகிறது. பொதுத்தேர்வு எழுதாத மற்ற மாணவர்கள் சரிவர பள்ளிக்குக் கூட வராத நிலை உள்ளது.

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புத்தகங்களுக்கு பதிலாக அரசு புதிய புத்தகங்கள் வழங்கி வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் பாதிப்புகள் அதிகம் இருப்பதையொட்டி சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ், ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டை போன்றவற்றிக்கு நகல் வழங்கப்பட்டு வருகிறது.

    அதேப்போன்று கனமழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்டத்தில் வங்கிக் கடன், புதியதாக வட்டியில்லா கடன், பயிர்க்கடன் போன்றவை வசூலிப்பதை நிறுத்தி வைக்க அரசு சலுகை வழங்கியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் சிலருக்கு மட்டுமே நிவாரணத் தொகை, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு எதுவுமே கிடைக்காத நிலையில் மக்கள் அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்.

    கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது 800க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதன்காரணமாக அரசு பல்வேறு உதவிகளை மேற்கொண்டது. அதில் ஒன்று கடற்கரையோரத்தில் வசிக்கும் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்று செலுத்தியது. அதேப்போல தற்போதும் கனமழையால் பாதிக்கப்பட்ட இம் மாவட்டத்தில் பயிலும் தனியார், அரசு பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்று செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    No comments: