Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, January 13, 2016

    பணித் தேர்வு நடைமுறைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

    பணித் தேர்வு நடைமுறைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அரசுத் துறைகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு துறைகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:


    பணியிடம் காலியாக இருப்பது தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்ட தேதிக்கும், அதற்கான எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிக்கும் இடையே அதிக கால இடைவெளி இருப்பது அரசு கவனத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற காலதாமதமானது, அந்த கால கட்டத்தில் பணிக்குத் தயாராக இருக்கும் தகுதி வாய்ந்த புதியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது போலாகும்.

    ஆதலால், அனைத்து மத்திய அமைச்சகங்கள் அல்லது மத்திய அரசுத் துறைகள், காலியான பணியிடங்களுக்கு புதிய நியமனங்களைச் செய்வதற்கான நடவடிக்கைகளை, அதாவது பணியிடம் தொடர்பான விளம்பரம் வெளியிடுவது முதல் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு நடத்துவது வரை அனைத்தையும் 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விடுமுறை பயணச் சலுகையைப் பெற புதிய விதி: இதனிடையே, மத்திய அரசு ஊழியர்கள் விடுமுறை பயணக்காலச் சலுகை (எல்டிசி) திட்டத்தில் செல்லும்போது உயரதிகாரிகளிடம் அனுமதி பெறுவது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை புதிய விதிகளை வகுத்துள்ளது.

    அதில், விடுமுறை பயணக்கால சலுகை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் விடுமுறையில் செல்லும்போது, உயரதிகாரிகளிடம் இனி தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, விடுமுறையில் செல்லும் ஊழியர்கள், தாங்கள் சென்ற இடங்களில் எடுத்த கைப்படங்கள், விடுமுறை விவரங்களை சுயகையொப்பமிட்டு அனுப்பினால் போதும் என்று புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் புதிய விதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் 15 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    No comments: