Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 19, 2016

    போலி ஆசிரியர் உட்பட 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

    போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும், அவருக்கு துணை சென்றவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பாரதியார் நகரைச் சேர்ந்தவர் முனியப்பன், 37. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், 42, என்பவர் மூலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் என்ற பெயரில், போலியாக ஆதிதிராவிடர் ஜாதி சான்று மற்றும் கல்வி சான்று பெற்று, குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
    கடந்த சில மாதங்களுக்கு முன், வேலூர் மாவட்டம், எர்ரம்பட்டி அரசு பள்ளிக்கு இடமாறுதலில் சென்ற முனியப்பனின் கல்வி, ஜாதி சான்றிதழ் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் படி விசாரித்தபோது, இவர் சான்றிதழ் போலி என்பது தெரிந்தது. தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார், முனியப்பன் அவருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த ராஜேந்திரன் ஆகிய, இருவரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைந்தனர். இந்நிலையில், முனியப்பன், ராஜேந்திரன் ஆகியோர், தங்களுக்கு ஜாமின் வழங்குமாறு, பாலக்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரன், அவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    No comments: