Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 1, 2016

    மழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவை ஜன.20-இல் நடத்த அண்ணா பல்கலை. முடிவு: ஏப்ரல் மாதத் தேர்வுகளும் ஒத்திவைப்பு

    மழை, வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவை ஜனவரி 20-ஆம் தேதி நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
    இதுபோல், ஏப்ரல் மாதத் தேர்வுகளையும் மே மாதத்துக்கு தள்ளி வைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.


     தொடர் மழை பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழக ஒற்றை இலக்கப் (1,3,5,7,9) பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்தத் தேர்வுகள் ஜனவரி இறுதியில்தான் முடிவடையும். இதனால், வழக்கமாக ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கப்பட வேண்டிய வகுப்புகள், பிப்ரவரிக்கு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏப்ரல் மாதம் நடைபெறும் இரட்டை இலக்க (2,4,6,8) பருவத் தேர்வுகளையும் தள்ளி வைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
     இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியது:

     மழை, வெள்ள பாதிப்பு காரணமாக பருவத் தேர்வுகள் மட்டுமின்றி, டிசம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட இருந்த 36-ஆவது பட்டமளிப்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் பட்டமளிப்பு விழா இப்போது ஜனவரி 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் அரங்கில் நடத்தப்பட உள்ளது. மேலும், வகுப்புகள் தள்ளிப் போவதால் ஏப்ரல் மாதம் நடத்தப்படும் தேர்வுகளை மே முதல் வாரத்துக்கு ஒத்திவைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

     மேலும் ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் சனிக்கிழமைதோறும் கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கும் என்றனர்.

    No comments: