Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 10, 2016

    நீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப கால அவகாசம்

    நுகர்வோர் நீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு மேலும் இரு வாரம் அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், எட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள், நீதிபதிகள் இன்றி செயல்படுகின்றன. சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்திலும், 2015 மே முதல் நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. இதனால், 10 ஆயிரத்து, 450 வழக்குகள் தீர்ப்புக்காகவும், 8,245 வழக்குகள் விசாரணைக்காகவும் காத்திருக்கின்றன.


    ’மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், நுகர்வோர் சமரச தீர்வு மையங்களை அமைக்க வேண்டும்; நுகர்வோர் நீதிமன்ற காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ எனக்கோரி, கோவையை சேர்ந்த, ’கன்சியூமர் வாய்ஸ்’ அமைப்பின் செயலர் லோகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி அமர்வு, பணியிடங்களை நிரப்ப, நான்கு வாரம் அவகாசம் வழங்கியது. அப்போது, ’இரு வாரங்களில் பணியிடங்கள் நிரப்பப்படும்’ என, தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

    ’தற்போதைய நிலையில், பணியிடங்களை நிரப்புவது சிரமம்; காலஅவகாசம் வழங்க வேண்டும்’ என, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கோரினார். இதையேற்ற நீதிபதிகள், பணியிடங்களை நிரப்ப, இரு வாரம் அவகாசம் வழங்கி, விசாரணை, டிச., 22க்கு தள்ளி வைத்தனர்.

    No comments: