Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, December 25, 2016

    சர்ச்சையில் 4 ஆயிரம் ஆசிரியர் 'டிரான்ஸ்பர்' : ரெட்டிக்கு தொடர்பா; கலக்கத்தில் அதிகாரிகள்!

    தமிழக கல்வித்துறையில் பெரும்அளவில் 2014-15ல் நடந்த 4 ஆயிரம்ஆசிரியர்கள் இடமாற்றம்பின்னணியில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்குதொடர்பு இருப்பதாக சர்ச்சைஎழுந்துள்ளது. இதனால் கல்விஅதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.


    தமிழகத்தில் முன்னாள் தலைமைசெயலர் ராமமோகன ராவ் ஆசியுடன்

    பொதுப்பணித்துறையில் மணல்குவாரிகள் உட்பட பல்வேறுதுறைகளிலும் மொத்த 'கான்ட்ராக்ட்' பெற்று கோலோச்சிய சேகர் ரெட்டிசி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.



    இவரது வாக்குமூலம் அடிப்படையில்,தலைமை செயலர் ராமமோகனராவ்வீட்டிலும் வருமான வரித்துறைசோதனை நடத்தி பல கோடி ரூபாய்மதிப்பிலான ஆவணங்களைபறிமுதல் செய்தனர்.
    தமிழகத்தில் இவர்கள் இருவர்கூட்டணியில் பல்வேறுதுறைகளிலும் முறைகேடுநடந்துள்ளதாக அடுத்தடுத்துதகவல்கள் வெளியாகின்றன. இதன்தொடர்ச்சியாக, கல்வித்துறையில்2014-15ம் ஆண்டில் நடந்த பெரும்எண்ணிக்கையிலான ஆசிரியர்கள்பணியிட மாற்றத்தில் பல கோடிரூபாய் முறைகேடுநடந்துள்ளதாகவும், அப்போது ஒருபணியிட இடமாற்றத்திற்குஅதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரைபேரம் நடந்தது குறித்தும் விசாரிக்கவேண்டும் என தற்போது சர்ச்சை
    ஏற்பட்டுள்ளது.
    அப்போது, ஆந்திராவை சேர்ந்தஒருவர் கண் அசைவில் தான்அனைத்து இடமாற்றங்களும்நடந்தன. அவருக்கும், தற்போதுகைதான சேகர் ரெட்டிக்கும் தொடர்புஉள்ளதா என்பது குறித்து வருமானவரித்துறை விசாரிக்க வேண்டும்என ஆசிரியர் சங்கங்கள்வலியுறுத்தி உள்ளன.
    சங்க நிர்வாகிகள் சிலர்கூறியதாவது: தமிழகத்தில் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற 25 ஆயிரம்பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநியமனம் நேர்மையாக நடந்தது. பின்இரண்டாம் கட்டமாக 5 ஆயிரம்பேருக்கும் பணிகள் வழங்கப்பட்டன.
    இதில் தென் மாவட்டங்களைசேர்ந்தவர்கள் தர்மபுரி, திருவண்ணாமலை, நாகபட்டினம், வேலுார், கிருஷ்ணகிரி ஆகியவடமாவட்டங்களில் பணிநியமனம்செய்யப்பட்டனர். பின், 'ஆசிரியர்கள்பொது மாறுதல் கவுன்சிலிங்' என்றபெயரில் பெரும்பாலானஆசிரியர்கள் தென்மாவட்டங்களுக்கு இடமாற்றம்செய்யப்பட்டனர்.
    தென் மாவட்டங்களில் போதியஆசிரியர்கள் இருந்தபோதும்'கூடுதல் பணியிடங்கள்' (உபரி) என்றபெயரில் 'தாராள' இடமாற்றஉத்தரவுகள் வழங்கப்பட்டன. இதில்ஒரே பள்ளி; ஒரே பாடத்திற்குஇரண்டுக்கு மேற்பட்டஆசிரியர்களுக்கு கூட இடமாற்றம்உத்தரவு வழங்கப்பட்ட சம்பவங்கள்நடந்தன. அந்த சமயத்தில் மட்டும் 4 ஆயிரம் இடமாற்றங்கள் நடந்தன.
    இதன் பின்னணியில், 'ஆந்திராவைசேர்ந்த ரெட்டி ஒருவர் இருந்தார்.அவரது உத்தரவில் தான்இடமாற்றங்கள் நடக்கின்றன' எனஆசிரியர் சங்கங்கள் அப்போதேவிமர்சித்தன.
    தற்போது சேகர் ரெட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவேஅப்போது 'ரெட்டி' எனஅழைக்கப்பட்டவர் 'சேகர் ரெட்டியா', அப்போதைய இடமாற்றங்களில்'ஆதாயம்' பெற்ற கல்வி அதிகாரிகள்யார் யார் என்பது குறித்தும் வருமானவரித்துறை விசாரித்து அவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், 
    என்றனர்.
    ஜெ., கைதிலும் தொடர்ந்த'டிரான்ஸ்பர்' 



    ஆசிரியர்கள் பணியிட மாற்றம்செய்யப்பட்ட நேரத்தில் 27.9.2014ல்சொத்து குவிப்பு வழக்குவிவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாகைதான சம்பவம் நடந்தது. அச்சமயத்தில், அதாவது செப்.,மாதத்திலும் கல்வித்துறையில்நுாற்றுக்கணக்கான ஆசிரியர்பணியிட இடமாற்ற உத்தரவுகள்பிறப்பிக்கப்பட்டன எனவும் சங்கநிர்வாகிகள் தெரிவித்தனர்.

    No comments: