5,000 ரூபாய்க்கு அதிகமான பழைய ரூபாய் நோட்டுகளை இன்னும் உங்கள் கைகளில் நீங்கள் வைத்துள்ளீர்களா வங்கிகளுக்கு விரைந்து செல்ல
வேண்டும். ஆரிபிஐ திங்கட்கிழமை இன்று பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெப்பாசிட் செய்வது குறித்து புதிய விதிகளை அறிவித்துள்ளது.
⏩புதிய 5000 ரூபாய் விதி
புதிய விதிப்படி அதிகப்படியான தொகையை டிசம்பர் 30 வரை ஒரு முறை மட்டுமே வங்கியில் டெப்பாசிட் செய்ய முடியும். 5000 ரூபாய்க்குக் குறைவாக டெப்பாஸிட் செய்யலாம்.
⏩⏩எதற்கு புதிய விதி?
கணக்கில் வராமல் கருப்புப் பணமாக இருப்பதைக் கண்டறிய இந்த புதிய விதியை அமல்படுத்துவதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
⏩⏩விளக்கம் அளிக்க நேரிடும்!
5,000 ரூபாய்க்கு அதிகமாக வங்கிகளில் டெப்பாசிட் செய்யும் போது வங்கி அதிகாரிகள் உங்களிடம் கேள்வி கேட்பார்கள். அதற்கு திருப்திகரமான பதிலை நீங்கள் அளிக்க வேண்டும்.
⏩⏩⏩கடைசி நாள் ..
ரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 30 கடைசி நாள். அதன் பிறகு மாற்ற இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⏩⏩⏩⏩ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும்.
வங்கி கணக்கில் 5000 ரூபாய்க்கு அதிகமான தொகையை டெப்பாஸிட் செய்யும் போது உங்கள் கணக்கிற்கு சரியான அடையாளம் மற்றும், முகவரி சான்றிதழ்களை அளித்து இருந்தால் மட்டுமே டெப்பாசிட் செய்ய இயலும்.
⏩⏩⏩⏩⏩யாருக்கு விலக்கு உண்டு?
இதுவே டிசம்பர் 17-ம் தேதி அறிவித்த பிரதான மந்திரி கரிப் கல்யாண யோஜனா திட்டத்தின் கீழ் கருப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வர இருப்பவர்களுக்கு இந்த விதி இல்லை
No comments:
Post a Comment