Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, December 17, 2016

    மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம்!

    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் பள்ளி தலைமையாசிரியர்களிடம் வினியோகிக்கப்படுகிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 58 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 14,323க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 


    அரசு முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தியது. அதன்படி, புத்தகங்கள் மூன்று பருவத்திற்கும் வினியோகிக்கப்படுகிறது. விலையில்லா புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. 

    அதில், அரசுப்பள்ளிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரிவிற்கான புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டன. தற்போது, தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் போது, மாணவர்களிடம் புத்தகங்கள் வழங்கும் வகையில், நேற்று அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

    பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில்,பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மொத்தம் 58 பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான புத்தகங்கள் தற்போது வந்துள்ளன. 

    இந்த பாட புத்தகங்கள் தற்போது, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இவை, அரையாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளி திறந்த முதல் நாள் மாணவர்களுக்கு வழங்கும் வகையில் இப்பணி நடைபெற்று வருகிறது. என்றனர்.

    No comments: