Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 16, 2016

    தேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு

    சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு நேரத்தில் உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆக.,1ல் மாணவர்களின் வருகைப்படி உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டன.


    தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வியாண்டின் இடையில் பணி நிரவல் செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரிஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறியதாவது: அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் மே மாதம் நடக்கும் கவுன்சிலிங்கில் தான் பணிநிரவல் செய்யப்படுவர். அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை திடீரென தேர்வு சமயத்தில் பணி நிரவல் செய்ய உள்ளனர். கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்களை மாற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். அவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்த முடியாது, என்றார்.

    No comments: