Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, December 28, 2016

    பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற அரசு பள்ளிகள் தீவிரம்!

    தமிழகத்தில், வரும் மார்ச் மாதம், பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. நாமக்கல்லில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


    ஆண்டு தோறும் நடக்கும் பொதுத்தேர்வில், தனியார் பள்ளிகளே, மாநில முதலிடம் பெற்று சாதனை படைக்கின்றன. அரசு பள்ளியும் சாதனை படைக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம். 

    இந்த ஆண்டு, மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, தலைமையாசிரியர்கள், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதுகுறித்து, தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. 

    இந்த ஆண்டு, 100 சதவீதம் தேர்ச்சியை எட்டும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 166 அரசு பள்ளிகள் உள்பட, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், 29 ஆயிரத்து, 831 பேர் பிளஸ் 2 தேர்வும், 23 ஆயிரத்து, 721 பேர் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வும் எழுதுகின்றனர். 

    அரசு பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்காக, அனைத்து ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். முக்கிய வினா-விடைகள் அடங்கிய கற்றல் கையேடு வழங்கப்பட்டுள்ளது. 

    ஜன., 6ல், முதல் திருப்புத்தேர்வு துவங்குகிறது. அதில், தோல்வி அடையும் மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்தி, தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: