Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 5, 2016

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை; ஆளுநர் வித்யாசாகர் ராவ்

    முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலையில் திடீரென்று மாரடைப்பு  ஏற்பட்டதை தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் கிரீம்ஸ் ரோட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர்.


    3 அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் இருந்து கிரீம்ஸ் ரோட்டுக்கு திரும்பும் இடம், எழும்பூர் கோ--ஆப்டெக்ஸ் சிக்னலில் இருந்து கிரீம்ஸ் ரோடு திரும்பும் இடம், கிரீம்ஸ் ரோட்டில்  இருந்து அப்பல்லோ திரும்பும் வழி, ஆஸ்பத்திரியின் மெயின் கேட் ஆகிய இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக் கப்பட்டு போலீசார் அரண் போல் நிற்கிறார்கள்.

    தொண்டர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அதிகாரிகள், டாக்டர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள் மட்டுமே கிரீம்ஸ் ரோடு வழியாக அனு மதிக்கப்படுகிறார்கள்.கிரீம்ஸ் ரோட்டில் இருந்து அப்பல்லோ  செல்லும் வழியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்றவர்களை தவிர யாரையும் அனுமதிக்க வில்லை. ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் செல்ல முக்கிய பிரமுகர்களை தவிர யாரையும் அனுமதிக்க வில்லை.

    மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ள னர். போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடி யாக மேற்கொண்டார்.

    இரவோடு இரவாக விடுமுறையில் இருக்கும் அனைத்து  போலீசாரும் உடனடி யாக பணிக்கு திரும் பும்படி உத்தரவிடப்பட்டது. காலை 7 மணிக்கு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார்  சீருடையுடன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.இதையடுத்து இன்று அதி காலையிலேயே போலீசார் பணிக்கு திரும்பினார்கள்.
    மாவட்ட தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழக நிலமை குறித்து ஆளுனர் வித்யா சாகர் ராவிடம்  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டறித்தார்.  தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கில் எந்த பிரச்சினையும் இல்லை என ஆளுநர் விளக்கம் அளித்து உள்ளார்.

    No comments: