Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 5, 2016

    "ரூபாய் நோட்டு நடவடிக்கையால் ஜிடிபி விகிதம் 2% உயரும்"

    பெருமதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 2 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:


    ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை காரணமாக அடுத்த ஆறு மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என்று சில பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். ஆனால், என்னைப் பொருத்தவரை அடுத்த ஆறு மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் அதிகரிக்கும்.

    பொருளாதார நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது. எனினும், எல்லா பணப் பரிவர்த்தனைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகக் கருதப்படுவதில்லை.
    ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, பொருளாதார நடவடிக்கையாகக் கருதப்படும் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமும் அதிகரிக்கும் என்றார் அவர்.

    No comments: