Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 15, 2016

    தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை: காவல் துறையில் அதிமுக புகார்

    ஜெயலலிதா இறப்பு குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறையில் அதிமுகவினர் புகார் செய்தனர். வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகரக் காவல் துறை அலுவலகத்துக்கு அதிமுக செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி, தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புதன்கிழமை மாலை வருகை தந்தனர்.

    இதையடுத்து, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் வெங்கடாஜலபதியை சந்தித்து அவர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர். பின்னர் சி.ஆர்.சரஸ்வதி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து பொதுமக்களிடம் தவறான தகவல்களைப் பரப்பும் வகையில் முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளையும், தகவல்களையும் சிலர் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

    அதேபோல எனது செல்லிடப்பேசியை தொடர்பு கொண்டு சிலர் அவதூறாகப் பேசுகின்றனர். இதனால் கட்சியினரும், பொதுமக்களும் குழப்பமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. சமூக ஊடகங்களில் வதந்தியைப் பரப்பவதன் மூலம் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை.
    ஆனால் சிறிதும் உண்மையில்லாத தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் படிப்பதன் மூலம், அவர்களுக்கு தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    No comments: