தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை இன்று புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. புதிய அறிக்கையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமானது.
ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவியின் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த 78 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோகிராம் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment