Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, December 1, 2016

    மழை விடுமுறை விழித்துக்கொண்ட கல்வித்துறை!!

    புயல் காரணமாக மழை பெய்யப்போகிறது என்ற முன்னெச்சரிக்கையே விவசாயிகள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்னொரு புறம் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது மாணவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வழக்கமாக கனமழை பெய்யும் போதுதான், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லமுடியாது என்பதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். கடந்த ஆண்டு சென்னை மழையின்போது கூட கனமழை பெய்த போதும் விடுமுறை அறிவிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது என்று சர்ச்சை கிளம்பியது. யார் விடுமுறை அறிவிப்பது என்பதிலும் குழப்பம் நிலவியது.


    மாவட்ட ஆட்சியரா அல்லது தலைமைச் செயலகத்தில் கல்வித்துறையா என்பதில் சர்ச்சை இருந்தது.  ஆனால், இப்போது நாடா புயல் 2-ம் தேதி காலை கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில் கல்வித்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்கள் மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு என முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொருபுறம் "இவனுகளை வீட்டில் வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது" என்று பெற்றோர் புலம்புவதையும் கேட்கமுடிகிறது.

    2015-ம் ஆண்டு மழை, வெள்ளத்தின் போது நவம்பர் மாத த்தில் தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் மழை காரணமாக பள்ளிகள் செயல்படவில்லை. டிசம்பர் மாதத்திலும் பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரையாண்டு தேர்வுகளும் நடைபெறவில்லை.

    No comments: