Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, December 2, 2016

    'நடா' புயல் வலுவிழந்தது; 2 நாட்கள் மழை தொடரும்

    கடலுார், நாகையை மிரட்டிய, 'நடா' புயல், நேற்று வலுவிழந்தது. ஆனாலும், 'இன்றும், நாளையும், கடலோர மாவட்டங்களில், பரவ லாக மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. வங்கக் கடலின் தென் கிழக்கில் உருவான, 'நடா' புயல், பலத்த காற்றுடன், வேதாரண்யம் புதுச்சேரி இடையே, இன்று அதி காலைக்குள் கரையை கடக்கும் என, கணிக் கப்பட்டது. 


    ஆனால், சென்னையிலிருந்து, தென் கிழக்கே, 290; புதுச்சேரியிலிருந்து, தென் கிழக்கே, 210; இலங்கை திரிகோணமலையிலி ருந்து, 220 கி.மீ., துாரத்தில், நேற்று பிற்பகலில் மையம் கொண்டுஇருந்த புயல், தீவிர காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

    இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

    காற்றழுத்த தாழ்வு மண்டலம்,இன்று அதி காலை,வேதாரண்யம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை நெருங்கியபின், வலு குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டல மாக மாறும். அதனால், கடலோர மாவட்டங்களுக் கான புயல் ஆபத்து நீங்கியுள்ளது.இருப்பினும், கடலோர பகுதிகளில், இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும்.

    கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்ப தால், மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண் டாம். ராமேஸ்வரம் முதல், சென்னை அருகேயுள்ள பழவேற்காடு வரை, 10 அடி உயரத்திற்கு, அலைகள் எழலாம். கடலோர பகுதிகளில், 65 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.

    துாத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில்,ஒன்றாம் எண்; சென்னை, எண்ணுார், காட்டுப் பள்ளி, நாகை, கடலுார், காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறை முகங்களில், மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப் பட்டுள்ளது. 

    ஒன்றாம் எண் கூண்டானது, எச்சரிக்கையாக இருங் கள் என்றும், மூன்றாம் எண் கூண்டுக்கு, பலத்த காற்று டன் கூடிய, மோச மான வானிலை யால், துறைமுகத்திற்கும், கடலோர பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்றும் அர்த்தம்.

    நேற்று காலை, 8.00 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், வேதாரண்யத்தில் அதிகபட்ச மாக, 5; நாகையில், 2 செ.மீ., மழை பதிவானது. புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார், புதுக்கோட்டை, செய்யூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில், நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

    No comments: