Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, December 5, 2016

    18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு : அரசு ஊழியர் சங்கம் கேள்வி

    அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டசம்பள பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய் எந்த கணக்கில் உள்ளது, என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்  கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர்கிருஷ்ணன், மாநில   துணைத்தலைவர் மெய்யப்பன்ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது:  தலைமைசெயலகம், சட்டசபை உள்பட 143 அரசு துறைகள்தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 6,49,201 நிரந்தரம், 4,12, 214 தற்காலிகஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிபடிபுதியபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளைதனியார்மயமாக்கும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.


    கடந்த 2003 ஏப்., 1  முதல்ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய்எந்த கணக்கில் உள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். எட்டாவது  ஊதியக்குழு அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், இதர சலுகைகள் வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக  அரசு துறைகளில் காலியாக உள்ள 3  லட்சம்  பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர்கள், வருவாய்  கிராம உதவியாளர்கள், ஊரக  நுாலகர்களுக்கு வறையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்,  தட்டச்சர்,இளநிலைஉதவியாளர் உள்பட இதர தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

    இவ்வாறு கூறினர். 

    No comments: