Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 17, 2016

    ஆசிரியர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு: ஆசிரியர் கூட்டணி கண்டனம்

    அரசு பள்ளிகளில் பணிசெய்யும் தலைமையாசிரியர்களை கல்வித்துறை அலுவலகப் பணியில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. அமைப்பின் மாநிலச் செயலர் சோ. முருகேசன், மாவட்டச் செயலர் செ. பால்ராஜ், தலைவர் பி.ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து அளித்த மனு:
    ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கான மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்ற முன்னுரிமைப் பட்டியல் இதுவரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஒப்புதல் பெற்ற பட்டியல் வழங்க வேண்டும்.

    வள்ளியூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஜனவரி மாத குறை தீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு காண வேண்டும்.

    நான்குனேரி ஒன்றியத்தில் பல்வேறு பள்ளி தலைமையாசிரியர்களை கல்வித்துறை அலுவலகப் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்துவதால், அவர்களுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நடைமுறையை கைவிட வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    மேலப்பாளையத்தில் உள்ள கஜானத்துல் உலூம் ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: