Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 21, 2016

    4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு?

    தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல் பணியில் சேர்ந்த நான்-கு லட்-சத்து, 23 ஆயி-ரத்து, 441 அரசு ஊழியர், ஆசிரியர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். ஊழியர்களிடம் வசூலித்த தொகை மற்றும் அர-சின் பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. 


    இதனால், பணியின்போது இறந்த ஊழியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை; நீதிமன்றம் மூலமே சிலர் பலன் பெற்றனர். கடந்த, 2011 சட்டசபைத் தேர்தல் அறிக்-கை-யில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்-வூ-திய திட்டம் ரத்து செய்யப்படும்,' என அ.தி.மு.க., வாக்குறுதி அளித்தது.

    ஆட்-சிக்கு வந்த பின், எந்த முயற்-சியும் எடுக்-கவில்-லை அதிருப்தி அடைந்த ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த்தில் ஈடு-பட்-டனர். இதனால், 'புதிய ஓய்-வூ-திய திட்டம் குறித்து, ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும்' என, முதல்வர் அறிவித்தார்; ஆனால், அரசாணை வெளியிடவில்லை.

    இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை பயன்படுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளைசந்தித்து, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் ஆதரவு கோரி வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணியினரும் ஆதரவு கேட்டுள்ளனர்.

    'வல்லுனர் குழு அமைக்கும் முன், தேர்தல் அறிவித்து விட்டனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வல்லுனர் குழு அமைக்கப்படும்' என அ.தி.மு.க.,வினர், 'தாஜா' செய்-து வருகின்றனர். இதனால், 4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

    1 comment:

    பெ. சக்திவேல் said...

    செய்தி தவறானது..... வல்லுனர் குழு அமைக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது..... கட்செவி அஞ்சல் மூலமாக பெரும்பாலானவர்களை இச்செய்தி சென்றடைந்து விட்டது..... உங்களுக்கு இன்னும் வரவில்லையோ? அல்லது நீங்கள் திமுக விசுவாசியோ!