Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 22, 2016

    மும்மொழி கல்வித் திட்டம் தேவை:தனியார் பள்ளிகள் சங்கம் தீர்மானம்

    தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்க பொதுகுழுக் கூட்டம், மாநில தலைவர் கனகராஜ் தலைமையில், பொதுச் செயலர் நந்தகுமார் முன்னிலையில், சென்னையில் நடந்தது. இதில், தனியார் பள்ளிகளின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின், 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:தமிழகத்தில், 20 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட, பழைய பள்ளி கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளின் திட்ட அனுமதி வேண்டும் என்ற முறையை, பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்.

    நில அளவு தொடர்பான அரசாணை வெளியிடும் முன் கட்டப்பட்ட பள்ளிகளுக்கு, நில அளவை கருதாமல், அங்கீகாரம் வழங்க வேண்டும். நில அளவு தொடர்பாக அமைக்கப்பட்ட, வல்லுனர் குழு அறிக்கையை அரசு வெளியிட்டு, அரசாணை பிறப்பிக்க வேண்டும் தரமற்ற சமச்சீர் கல்வியை ரத்து செய்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கல்வி முறையை கொண்டு வர வேண்டும்; முப்பருவ முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    தமிழகத்தில், மும்மொழி கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும்கடந்த, 2005 முதல் மாற்றப்படாத பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றி, புதிய பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும்எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' செய்யும் திட்டத்தால், தமிழக பள்ளிக்கல்வியின் தரம் தாழ்ந்து விட்டது. எனவே, உடனடியாக இந்த திட்டத்தை ரத்து செய்து விட்டு, படித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பாஸ் செய்ய வேண்டும் என்ற, புதிய சட்டம் தேவை
    கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான, கல்வி கட்டணம், 150 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. அதை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    My Blogger Tricks

    No comments: