Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 2, 2016

    கல்வித்துறை நிலம் மாயம்; இயக்குனர் ஆய்வு

    கல்வித்துறைக்குச் சொந்தமான நிலம் காணாமல் போனது குறித்து,கல்வித்துறை இயக்குனர் நேற்று ஆய்வு நடந்தினார். பழைய மூணாறில் கல்வித்துறைக்குச் சொந்தமாக 73 சென்ட் நிலம் இருந்தது. இந்த இடத்தில் தேசிய ஆசிரியர்கள் நல அறக்கட்டளை சார்பில்,ரூ.3.5 கோடியில் கல்வித்துறைக்குத் தேவையான வகையில் மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2011 மார்ச் 27ல், தொடங்கியது. அப்போது நடத்தப்பட்ட சர்வேயில், 45 சென்ட் மட்டும் காணப்பட்டது. 


    கல்வித்துறைக்குச் சொந்தமான நிலத்தை அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியினர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் தூண்கள் கான்கிரீட் செய்யப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் கைவிடப்பட்டன.


    ஆய்வு

    நிலம் காணாமல் போனது குறித்து, பொது கல்வித்துறை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் சுதாகரன் மற்றும் தேவிகுளம் சர்வே அதிகாரி பினு பிப். 12ல்,ஆய்வு நடத்தினர். இதன் அறிக்கையை கல்வித்துறை இயக்குனர் ஜெயாவிடம் தாக்கல் செய்தனர். அதன்படி இவர் நேற்று நிலம் காணாமல் போனதைக் குறித்து, நேரில் ஆய்வு நடத்தினார். தேவிகுளம் ஆர்.டி.ஓ., ஷபின்சமீர், ஆசிரியர்கள் நல அறக்கட்டளை உறுப்பினர்கள் அப்துல் ஆஷிஸ், செரியாக் உடன் இருந்தனர்.

    நிலம் காணாமல் போனதாக தெரியவந்துள்ளதாகவும், இதன் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கைவிடப்பட்ட கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என இயக்குனர் ஜெயா தெரிவித்தார்.

    No comments: