Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, July 9, 2016

    லேப்டாப் வழங்குவதில் குளறுபடி : சென்னையில் ஆலோசனை

    'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்குவது குறித்து, ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, சென்னையில் தொழிற்கல்வி இணை இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது,' என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011 முதல் பிளஸ் 2 மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. பல லட்சம் மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டன.


    இதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்களும் வந்தன . பல பள்ளிகளில் மாணவர்கள் படித்து முடித்து சென்ற பின், அவர்களின் பெயரில் லேப்டாப்கள் வாங்கப்பட்டு வெளிசந்தையில் விற்கப் பட்டுள்ளன. சில பள்ளிகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு லேப்டாப்கள் திருடப்பட்டன. இதையடுத்து மாணவர்களின் ஆதார் எண் இருந்தால் மட்டுமே லேப்டாப் வழங்க வேண்டும், மாணவர்களின் கையெழுத்து அவசியம் என கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. ஒரு பள்ளிக்கு எத்தனை லேப்டாப்கள் தேவை என்பதை பள்ளி தலைமையாசிரியர் தான் அரசு தெரிவிக்க வேண்டும். அதன்பின் எல்காட் மூலம் நேரடியாக பள்ளிக்கு அனுப்பும். கூடுதலாக உள்ள லேப்டாப்கள் கலெக்டருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

    நான்கு நாட்கள் : 2016 -- 17 ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்குவது குறித்து, ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், சென்னையில் தொழிற்கல்வி இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி தலைமையில் 8 மாவட்டங்களாக பிரித்து, ஜூலை 19, 20,21,22 என நான்கு நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    No comments: