Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 26, 2016

    கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள்: மக்களவையில் அமைச்சர் ஜாவடேகர் விளக்கம்

    கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மக்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.


    இது தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது விழுப்புரம் தொகுதி அதிமுக உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன், "வெளிநாடு பல்கலைக்கழங்களில் இந்திய மாணவர்கள் சேர்க்கையின் போது திறன்சார் விஷயங்களில் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். ஆகவே, கற்பித்தல் முறையை மேம்படுத்த ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?' என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், "தரமான உயர் கல்வியும், கற்பித்தலும் மிகவும் முக்கியமானவை. ஆகவே, கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்காவும், தொடர் கல்வி, தரமேம்பாட்டுக்காவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் கல்லூரிகளிலும் கூட கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது' என்றார். 

     கல்வி உரிமைச் சட்ட நிதி: மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் டி.ரத்தினவேல் திங்கள்கிழமை சிறப்பு கவனக் குறிப்பை தாக்கல் செய்து பேசுகையில், "தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 2013-14-ஆம் கல்வியாண்டில் 49,864 மாணவர்களும், 2014-15-ஆம் ஆண்டில் 86,729 மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான செலவு ஈட்டுத் தொகையாக முறையே ரூ.25.14 கோடி மற்றும் ரூ.71.91 கோடி ரூபாய் என தமிழக அரசு கணக்கிட்டு வழங்கியுள்ளது. அந்த வகையில் ரூ.97.05 கோடியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டியுள்ளது. இத்தொகையை விரைந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

    No comments: